tamilnadu

img

சாகித்ய அகாடமியில் ஒன்றிய அரசின் தலையீடு தன்னாட்சி அதிகாரத்தைச் சிதைப்பதாகும்!

அமைச்சர் கஜேந்திரசிங்-க்கு  சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்

புதுதில்லி,  டிச. 20- சாகித்ய அகாடமி விருதுகள் தொடர்பான முடிவின் மீது, ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சகம் தலையிடுவது, சாகித்ய அகாடமி உருவாக்கப்பட்டதன் நோக்கம், அதன்  தன்னாட்சி அதிகாரத்தை சிதைப்பதா கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மதுரை தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஒன்றிய கலாச் சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திற்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

விருது பரிந்துரைகள் நிறுத்தம் தவறான முன்னுதாரணம்!

2025-ஆம் ஆண்டுக்கான விருதுகள் தொடர்பான சாகித்ய அகா டமியின் தேசிய செயற்குழு முடிவுகளில்,  ஒன்றிய கலாச்சார அமைச்சகம் அண் மையில் தலையீடு செய்திருப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், சாகித்ய அகாடமி விருது  பெற்றவர் என்ற முறையிலும், எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்க இக்கடிதத்தை எழுதுகிறேன். தேசிய செயற்குழு, நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, முறை யாக அமைக்கப்பட்ட அந்தந்த மொழி வாரியான நடுவர் குழுக்களின் பரிந்து ரைகளுக்கு ஒப்புதல் அளித்தது. பல  தசாப்தங்களாக, இந்த செயல்முறை தான் இலக்கிய உலகில் அகாடமியின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரத்தை  உறுதி செய்து வருகிறது. இந்தப்  பரிந்துரைகளை நிறுத்தி வைப்பதற்கும்,  நடுவர் குழுவின் செயல்முறையை ஒரு  ‘தணிக்கைக்கு’ (Audit) உட்படுத்துவதற் கும் அமைச்சகம் எடுத்துள்ள முடிவு முற்றிலும் தேவையற்றது மற்றும் முன்னுதாரணமற்றது.

இலக்கியத் தீர்ப்புகளுக்கு நிர்வாகத் தணிக்கையா?

சாகித்ய அகாடமி வரலாற்றில் இதுவரை எந்தவொரு காலக்கட்டத்தி லும், நிபுணர் குழுக்களால் எடுக்கப் பட்ட இலக்கியத் தீர்ப்புகள் நிர்வாகத்  தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட தில்லை. இலக்கிய மதிப்பீடு என்பது  நிதி அல்லது நடைமுறை சார்ந்த பரி வர்த்தனை அல்ல; அது நிபுணத்து வம், சக படைப்பாளிகளின் மதிப்பீடு  மற்றும் கல்விசார் நேர்மை ஆகிய வற்றின் அடிப்படையிலான ஒரு அறிவு சார் பயிற்சியாகும். இதனை அதிகாரத் துவ ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது நிறுவனத்தின் தன்னாட்சி அதி காரத்தை ஆக்கிரமிப்பதற்கும், அகா டமியின் நோக்கத்தைச் சிதைப்பதற் கும் சமமாகும். இலக்கியத்தை நிர்வாகத் தலை யீடுகளிலிருந்து பாதுகாப்பதற் காகவே சாகித்ய அகாடமி ஒரு தன் னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது.  நடுவர் குழுவின் முடிவுகளை மீறவோ  அல்லது மறுபரிசீலனை செய்யவோ  எடுக்கும் எந்தவொரு முயற்சியும் இந்தத் தன்னாட்சியின் மையப்பகுதி யைத் தாக்குவதோடு, கருத்து சுதந்தி ரத்தை சிதைப்பதாகும். இது ஆழ்ந்த கவலைகளை எழுப்புகிறது. 

அச்சுறுத்தும் நடவடிக்கை

இத்தகைய தலையீடுகளை எதிர் கொள்ளும் வேளையில் அகாடமி தொ டர்ந்து மவுனம் காப்பது வருத்தமளிப்ப தோடு, அதன் புகழ்பெற்ற பாரம்பரி யத்திற்கு முரணானதாகவும் உள்ளது. ஒரு முதன்மையான கலாச்சார  நிறுவனம், தனது அறிவுசார் தீர்ப்பு களை நிர்வாக மறுபரிசீலனைக்கு சமர்ப்பிக்க கட்டாயப்படுத்துவது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உரு வாக்கும் என்பதை நான்  தெரிவிக்க விரும்புகிறேன். இது சுதந்திரமான கலாச்சார அமைப்புகளை நிர்வாகக் கட்டுப்பாட்டின் கருவிகளாக மாற்றும்  அபாயத்தைக் கொண்டுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள எழுத்தாளர் கள் மற்றும் அறிஞர்களுக்கு ஒரு அச்சு றுத்தல் செய்தியை அனுப்புகிறது. எனவே, அமைச்சகம் தனது தலை யீட்டை உடனடியாகத் திரும்பப் பெற வும், நடுவர் குழு முடிவுகளின் மீதான  தணிக்கை அல்லது மறுபரிசீலனை  நடவடிக்கைகளைக் கைவிட வேண்டு மெனவும் வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி.  வலியுறுத்தியுள்ளார்.