tamilnadu

இந்தப் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டது: ஈரான்

இந்தப் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டது: ஈரான்

டெஹ்ரான்/டெல்அவிவ், ஜூன்16- “இஸ்ரேல் உடனான போர் எங்கள் மீது திணிக்கப் பட்டது; நாங்கள் அதை விரும்பவில்லை” என ஈரா னின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.   இஸ்ரேல் - ஈரான் போர் திங்களன்று நான்காவது நாளாக தொடர்ந்த நிலை யில், ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஃபதேமே மொஹஜெரானி, பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.  அதில், “இந்தப் போர் எங்கள் மீது திணிக்கப்பட் டது. நாங்கள் அதை விரும்ப வில்லை. இஸ்ரேலின் தாக்குதல்களில் 45 பெண் கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து படுகொலை செய்துவிட்டு ராணுவ தளங்களை மட்டுமே தாக்குவதாக இஸ்ரேல் பொய்யான தகவலை தெரிவிக்கிறது” என குற்றம்சாட்டியுள்ளார்.  “அமெரிக்காவின் ஆயு தங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை இஸ்ரேல் படுகொலை செய்யும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்த மற்றது” என ஈரான் வெளி யுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி குறிப் பிட்டுள்ளார்.