tamilnadu

img

மீண்டும் கிளம்பிய “படையப்பா” யானை

மீண்டும் கிளம்பிய “படையப்பா” யானை

கும்கியாக மாற்ற கோரிக்கை?

தமிழ்நாடு - கேரள எல்லை களில் பல்வேறு காட்டு யானை கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவது சகஜமான விஷயம் தான்.  செயல்பாடு மற்றும் உருவத் தோற்  றத்தை வைத்து தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறையினர் காட்டு யானைகளுக்கு பெயர் வைத்து அதனை பிடித்து, மீண்டும் காட்டிற்  குள் விடுவார்கள். இது காலங்கால மாக பின்பற்றப்பட்டு வரும் வனத்துறை நடைமுறையாகும். இந்நிலையில், தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதி மற்றும் மூணாறு, தேவிகுளம் பகுதிகளில் அடிக்கடி ஆட்டம் காண்பித்து வரும் “படையப்பா” காட்டு யானை மீண்டும் தனது அட்டகாசத்தை துவங்கியுள்ளது. கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள குண் டலை, செண்டுவாரை ஆகிய தேயிலை தோட்ட பகுதிகளில் கடந்த  சில நாட்களாக படையப்பா காட்டு  யானை உணவுக்காக சுற்றித்திரி கிறது. தோட்டங்களில் உள்ள பயிர் களை சேதப்படுத்தியும், குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசமும் செய்து வந்தது. இத்தகைய சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று அதி காலை குண்டலை தேயிலை தோட்ட பகுதியில் “படையப்பா” யானை மீண்டும் உலா வந்தது. அப்போது  அருகே உள்ள குடியிருப்பு பகு திக்குள் புகுந்து தொழிலாளர்கள் பயிர் செய்திருந்த பீன்ஸ், முட்டை  கோஸ், கேரட் உள்ளிட்ட காய்கறி களை தின்று சேதப்படுத்தியது. இத னால் விவசாயிகள் “படையப்பா” காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

படையப்பா” சாதுவானது; நடவடிக்கை எடுக்க திணறும் வனத்துறை

மற்ற காட்டு யானைகளை போன்றல்லாமல் “படை யப்பா” யானை மிகவும் சாதுவா னது. உணவு கிடைக்காத நேரங்க ளில் அல்லது தனக்கு பிடித்த வைகளை சாப்பிட “படையப்பா”  அடிக்கடி குடியிருப்பு பகுதி களுக்கு நுழையும். கிடைக்கும் உணவை சாப்பிடும். மக்களுக்கு எவ்வித தொந்தரவும் அளிக் காது. சத்தம் போட்டு கத்தி னால் அந்த இடத்தை விட்டு ஓடி விடும். குறிப்பாக பசியைப் போக்கி கொண்டால் தானாக வனப்பகுதிக்குச் சென்றுவிடும். “படையப்பா” தாக்குதல், சேட் டைகள் எதுவும் செய்யாது.  கும்கி குணம் ஆனால் பயிர்களை நாசம்  செய்வதால் வனப்பகுதி மக்கள், ”யானையை காட்டுக்குள் கொண்டு செல்லுங்கள்” என  கூறுவார்கள். மற்றப்படி கடும் நட வடிக்கை எடுக்கக் கூற மாட்  டார்கள். அதே போல வனத் துறையினரும் “படையப்பா”  கும்கி யானைகள் போன்று சொல்வதை கேட்பதால் அதனை குழந்தையை செல்ல மாக மிரட்டுவது போல, சாதா ரண மிரட்டலிலேயே வனத்திற் குள் அனுப்பி வைக்கின்றனர்.யானையின் குணம் மிக நன்றாக இருப்பதால் படை யப்பாவை கும்கியாக மாற்ற லாமே என மூணாறு பகுதி விவ சாயிகள் கோரிக்கை விடுத்து  வருகின்றனர். ஆனால் வனத்  துறை மூர்க்கமான யானைகளை  மட்டுமே கும்கியாக மாற்றும்  நடவடிக்கையை மேற்கொள் ளுமே தவிர சாதுவான யானை களை மாற்றாது. இதனால் “படையப்பா” தொடர்பாக என்ன  நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். (சிறைப்படுத்தப்பட்டு யானைப்பாகன்களால் பயிற்சி  அளிக்கப்பெற்ற, பயமற்ற இந்திய யானைகளை கும்கி என  அழைப்பார்கள். இவை காட்டு யானைகளை விரட்ட மற்றும் இதர பேரிடர் காலங்களில் பயன் படுத்தப்படும்)