குறுவை சாகுபடி திட்டத்தை 2.5 ஏக்கராக விரிவுபடுத்த வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு பெ. சண்முகம் வேண்டுகோள்
கும்பகோணம், ஜூன் 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் நடை பெறும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத் தின் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டத் தில் வல்லம் பேருந்து நிலையம் அருகிலும், திருவையாறு ஒன்றியம் காருக்குடி பகுதியிலும் பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம், விவசாயிகளுக்கான கோரிக்கை களை முன்வைத்தார். குறுவை சாகுபடி திட்ட விரிவாக்கம் அவசியம் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் குறித்து பேசிய பெ. சண்முகம், “தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு திட்டமிட்டபடி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டது மிக்க மகிழ்ச்சி. தமிழக அரசிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கி றேன்” என்று தெரிவித்தார். தற்போதைய திட்ட வரம்புகள் குறித்து பேசிய அவர், “குறுவை சாகு படி தொகுப்புத் திட்டத்தில், அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவதற்கு ஏது வாக, அரசாணையில் ஒரு ஏக்கருக்கு மட்டுமே- அதிலும் ரேசன் அட்டை வைத்திருக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு வருக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை முறைப்படுத்தி, இரண்டரை ஏக்கர் வரை குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை விரிவுபடுத்தி தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். நெல் கொள்முதல் விலை போதாது அரசு அறிவித்த நெல் கொள்முதல் விலை குறித்து குறிப்பிட்ட பெ. சண்முகம், “தேர்தல் காலத்தில் அறி விக்கப்பட்ட- நெல்லுக்கு குவிண்டா லுக்கு 2500 ரூபாய் என்ற விலை - நான்கு ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு தற்போது உயர்த்தி வழங்கப் பட்டுள்ளது. இந்த 4 ஆண்டு காலத்தில் விவசாயத்திற்கான இடுபொருள்கள், உரங்கள் விலை உயர்வு காரணமாக உற்பத்திச் செலவு மேலும் அதி கரித்துள்ளதால், அரசு அறிவித்துள்ள உயர்வு செலவை ஈடுசெய்யாது” என்று குறிப்பிட்டார். “விலைவாசிக்கு உயர்வுக்கு ஏற்ப, கொள்முதல் விலை உயர்வு இல்லை. ஆகவே குவிண்டாலுக்கு கூடுதலாக வழங்க வேண்டும்” என்று தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார். சர்க்கரை ஆலைகள் மீண்டும் இயக்கப்பட வேண்டும் அரசு சர்க்கரை ஆலைகள் குறித்து பேசிய பெ. சண்முகம், “தமிழ்நாட்டில் பல அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை கள் மூடப்பட்டதால், கரும்பு உற்பத்தி குறைந்து வருகிறது. ஆனால், தனி யார் ஆலைகள் செயல்பட்டு வரு கின்றன. சர்க்கரை தேவை அதிகம் உள்ளதால் அரசு சர்க்கரை ஆலையை மீண்டும் துவங்க வேண்டும். சர்க்கரை ஆலை பணியாளர்களை பாதுகாத்திட வேண்டும். மேலும், புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். நீர்நிலை குடியிருப்பாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் நீர்நிலைகளில் குடியிருப்பவர் களின் பிரச்சனை குறித்து விரிவாக பேசிய பெ. சண்முகம், “நீர்நிலைகளில் குடியிருப்பவர்களை அகற்றும் நட வடிக்கையில் ஆவணங்களை மட்டுமே வைத்துக்கொண்டு நீதிமன்ற உத்தரவை முன்வைத்து பல குடும்பங்களை தெருவில் தள்ளும் கொடுமை நடக்கிறது. டெல்டா பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் இதுபோன்ற நடவடிக்கை யால் மிகவும் கஷ்டப்பட்டு வரு கிறார்கள்” என்று கவலை தெரிவித்தார். 1949-ஆம் ஆண்டு ஆவணங்கள் குறித்து எடுத்துரைத்த பெ. சண்முகம்: “நீர்நிலைப் புறம்போக்குகளில் குடி யிருப்பவர்களை 1949-ஆம் ஆண்டு ஆவணங்களின்படி அப்புறப்படுத்து வதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த 75 ஆண்டுகளில், சாதாரண ஏழை மக்கள் குடியிருக்கும் நீர்நிலைப் புறம்போக்குகள், குடியிருப்புப் பகுதி யாக, ஊராக- நகராக மாறி பல ஆண்டு களாகி விட்டன. ஆவணங்களில் மட்டுமே நீர்நிலை என்று உள்ளது. எனவே, ஆவணங்களில் உள்ளதை மாற்றி பட்டா வழங்க அரசு முன்வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இது சம்பந்தமாக ஏற்கெனவே தலைமைச் செயலாளரை சந்தித்து முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நூறு நாள் திட்டத்திற்கு கூடுதல் நிதி வேண்டும் நூறு நாள் வேலைத் திட்டம் குறித்து கடுமையான விமர்சனம் செய்த பெ. சண்முகம், “கிராமப்புற மக்களுக்கு உறுதுணையாக விளங்கும் நூறு நாள் திட்டத்தினை, விவ சாயத் தொழிலாளர்கள் கோரிக்கை களை கேட்காமல் பிச்சை போடுவது போல ஒன்றிய அரசு நடந்து வருகிறது. இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு 2.5 லட்சம் கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். வல்லம் பிரச்சார கூட்டம் தஞ்சை ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராசு தலைமையில் நடை பெற்ற வல்லம் பிரச்சாரக் கூட்டத்தில், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தலைவர் என். சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோ. நீலமேகம், ஆர்.மனோகரன், செந்தில்குமார், என். சரவணன், கே.அபிமன்னன், கலைச் செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் சரிதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். காருக்குடி பிரச்சார கூட்டம்: காருக்குடியில் திருவையாறு ஒன்றியச் செயலாளர் ராஜா தலைமை யிலான பிரச்சாரக் கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.வி. கண்ணன், ராமு, பழனி அய்யா, ரமேஷ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.