அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவு
திருப்பூர், செப்., 18- அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பாக வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்” திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க் கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப் பகுதிகளில் மொத்தம் 21,867 ஏக்கர் நிலங்களுக்கு, அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதம் 4233.60 மில்லி யன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கவேண்டும். திருப்பூர் மாவட்டம், அமரா வதி புதிய பாசனப் பகுதிகளில் மொத்தம் 25,250 ஏக்கர் நிலங்களுக்கு, அமராவதி பிரதானக் கால்வாய் வழி யாக வினாடிக்கு 440 கன அடி வீதம் 2661.12 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க வேண்டும். இரண்டி லும் வெள்ளிக்கிழமை அன்று முதல் ஜனவரி 31 வரையி லான காலத்தில் மொத்தம் 134 நாட்களில், 70 நாட்கள் தண்ணீர் திறப்பு, 64 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில், மொத்தம் 6894.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதி அணையிலிருந்து பாச னத்திற்காக தண்ணீர் திறந்து விட அரசு ஆணை யிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” என அதில் கூறப்பட்டுள்ளது.