எஸ் வங்கியின் ரூ.2,796 கோடி பணமோசடி தொடர்பாக அனில் அம்பானிக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
எஸ் வங்கிக்கு ரூ.2,796 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட ரிலையன்ஸ் கேபிட்டல் லிமிடெட் நிறுவன இயக்குனர் அனில் அம்பானி மற்றும் எஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூர், ராணா கபூரின் மனைவி பிந்து கபூர், அவரது மகள்கள் ராதா கபூர் மற்றும் ரோஷினி கபூர் ஆகியோருக்கு எதிராக கடந்த 2022-ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், அனில் அம்பானி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், விதிமுறைகளை மீறி அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் ராணா கபூர் இந்த முதலீடுகளை செய்ததாகவும், இந்த பணம் பின்னர் படிப்படியாக கையாடல் செய்து, வங்கிக்கு ரூ.2,796 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.