சென்னை.ஜன.22 - ஒன்றிய பாஜக அரசு அறி வித்துள்ள மக்கள் விரோத மிக மோசமான வேளாண்மை சந்தைப் படுத்தலுக்கான தேசிய கொள்கை கட்டமைப்பு திட்டத்தை (NPFAM) எதிர்த்து நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம்தேதி விவசாயிகள், தொழிலாளர்கள் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடத்த உள்ளனர். இதுகுறித்து சென்னையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப் பாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: நாட்டு மக்களுக்கு விரோத மான வேளாண்மை சந்தைப் படுத்துலுக்கான தேசிய கொள்கை கட்டமைப்பு திட்டத்தை (NPFAM) அறிவித்துள்ளது. இத்திட்டம் இந்தியாவில் உள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், வியாபாரிகள், மண்டி கள் ஆகியோர் உரிமைகளை பறிக்கக் கூடிய சட்டமாகும்.
கார்ப்பரேட்டுகள் வசம் வேளாண் வணிகம்
மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படும். மக்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஒரு தொடர்பை உருவாக்குவார்கள். இதனால் மாநில வருவாயை ஒன்றிய அரசு எடுத்துக்கொள் கிறது. திட்டத்தின் அடிப்படை நோக்கம் ஒரே நாடு, ஒரே வேளாண் சந்தை திட்டம் என்பதாகும். கார்ப்ப ரேட்டுகளுக்கு வேளாண் வணி கத்தை திறந்து விடுவதே இதன் நோக்கம். இந்தியாவில் உள்ள அனைத்து நிலங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றி விவ சாயிகள் நிலங்களில் என்ன பயிர், உரம் போடுவது என்று ஒன்றிய அரசு மற்றும் கார்ப்பரேட்டுகள் தீர்மானிப்பார்கள். இதன் விளைவு விவசாயத்தை ஒன்றிய அரசு கார்ப்பரேட்டுகளிடம் கொடுக்கி றது. இத்திட்டம் விவசாயிகள் மீது, விவசாயம் செய்யும் முறை மற்றும் பயிர்கள் மீது ஒன்றிய அரசு கட்டுப்பாட்டைத் திணிப்பதால் மாநில அரசின் உரிமைகளை பறிக்கப்படுகின்றன.
ரேசன் கடைகளை ஒழிக்கும் முயற்சி
C2+50 அடிப்படையிலான குறைந்தபட்ச ஆதார விலைகள் குறித்தும், விவசாயிகளிடமிருந்து தானியங்களை கொள்முதல் செய்வது மற்றும் பொது விநி யோக முறை பற்றியும் எந்த வித குறிப்புகளும் இத்திட்டத்தில் இல்லை. கொள்முதல் இல்லை என்றால் ரேசன் கடைகள் இருக்காது. இது படிப்படியாக நாட்டில் உள்ள ரேசன் கடைகளை மூடும் முயற்சியாகும். மக்கள் விரோத, விவசாயிகள் விரோத கூட்டாட்சி தத்துவத்திற்கு எதி ரான வேளாண் சந்தை படுத்தலுக் கான தேசிய கொள்கை கட்டமைப்பு திட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பிரதம ருக்குக் கடிதம் எழுத வேண்டும். என்று முதலமைச்சரை சந்தித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநிலத் தலைமைக் குழு வலியுறுத்துவோம். நாடாளுமன்ற உறுப்பினர் களையும் சந்தித்து மக்கள் விரோதமான என்பிஎப்ஏஎம் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிரா கரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்போம். ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுத வேண்டும் என்று வலியுறுத்து வோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள், தொழிலாளர்கள் இணைந்து டிராக்டர், வாகனம் மற்றும் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மேரி லில்லிபாய், தமிழ்நாடு விவசாயி கள் சங்க தென்சென்னை மாவட்ட செயலாளர் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.