இலங்கை திரும்ப விரும்பும் ஈழ தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை: வடக்கு மாகாண ஆளுநர் தகவல்
இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப விரும்பும் ஈழ தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்க ளில் சுமார் 60 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். மேலும் 40 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியே காவல் நிலையங்களில் பதிவு செய்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்தி யாவில் அகதிகளாக உள்ள ஈழ தமிழர்களை இலங்கைக்கு திரும்ப அழைத்து வருவது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், “தற்போது தமிழகத்தின் முகாம் களில் உள்ளவர்களில் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்து வர முடியாது. வர விரும்புபவர்களுக்கு தேவை யான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாடு திரும்புவர்களுக்கான உதவி களை வழங்குவதுடன், அவர்கள் நாடு திரும்புவதற்கான தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அர சாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்கு வதற்கான கோரிக்கையும் அரசாங் கங்களிடம் முன்வைக்கப்படும்” என்றார்.