மாணவர் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு
மாணவர்களின் தற் கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்க ளில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது நாடெ ங்கிலும் பெற்றோர்கள் மத்தி யில் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ள நிலையில், அவற்றைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாணவர் களின் மனநலன் சார் பிரச்ச னைகளைக் களையவும் அவற்றுக்கு தீர்வு காணவும் ஏதுவாக தேசிய அளவிலான செயற்குழுவை அமைக்க உச்சநீதிமன்றம்(மார்ச் 24) உத்தரவிட்டுள்ளது. தில்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் தற் கொலை செய்துகொண்ட நிலையில், தங்கள் பிள்ளை கள் மேற்கண்ட கல்வி நிறு வனத்தில் சாதி ரீதியான பாகு பாட்டாலும், திணிக்கப்பட்ட அழுத்தத்தாலுமே தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வும், இதுகுறித்து காவல் துறை யிடம் பலமுறை புகார் அளிக் கப்பட்டிருந்தாலும் அவர்கள் வழக்குப்பதிய தவறி விட்ட தாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் உச்சநீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்தனர். இந்த வழக்கு நீதிபதி கள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு திங்களன்று (மார்ச் 24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, “கல்வி நிறு வன வளாகத்துக்குள் தற் கொலை உள்ளிட்ட அசம்பா விதங்கள் ஏதும் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவ னங்கள் தரப்பிலிருந்து உரிய அதிகாரிகளிடம் முதல் தக வல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்வதை உறுதி செய் வது கட்டாயக் கடமை” என்று தெரிவித்த நீதிபதிகள், “கல்வி நிறுவனங்கள் வெறுமனே கல்வியறிவை கற்பிக்கும் இடம் மட்டுமல்ல; மாணவர் களின் நலன் மற்றும் ஒருங்கி ணைந்த வளர்ச்சிக்கும் இந் நிறுவனங்களே பொறுப்பாகும்” என்றும் கூறினர். மேலும், “ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பொறுப்பு ணர்வுடன் செயல்பட்டு அங்கு பயிலும் மாணவர்கள், ‘தங்கள் மீது எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை, பயமின்றி இங்கு நாம் படிக்க லாம், பாதுகாப்பாக இருக்கி றோம்’ என்பதை உணர வழி வகை செய்ய வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, உச்ச நீதி மன்ற உத்தரவின்பேரில் முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் 9 பேர் அடங்கிய தேசிய அள விலான செயற்குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்தக்குழு உரிய விசாரணை நடத்தி அடுத்த நான்கு மாதங்களில் இடைக்கால அறிக்கையை யும், 8 மாதங்களில் விரி வான அறிக்கையையும் சமர்ப் பிக்க அறிவுறுத்தி, இந்த குழுவுக்கு ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கிட ஒன்றிய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.