tamilnadu

img

லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் டிரம்புக்கு எதிராக போராட்டம்!

லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் டிரம்புக்கு எதிராக போராட்டம்!

நியூயார்க், ஜூன் 16 - அமெரிக்க ராணுவத்தின் 250-ஆவது அமைப்பு தினத்தன்று டிரம்புக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர்.  அமெரிக்க ராணுவம் நிறுவப் பட்ட ‘ஜூன் 14’ என்ற நிலையில், இதை யொட்டிய ராணுவ அணிவகுப்பை, அன்று பிறந்தநாள் கொண்டாடிய ஜனாதிபதி டிரம்ப்பை கவுரவிக்கும் விதமாகவும், அரசியல் காரணங் களுக்காகவும் அமெரிக்க அரசு பயன் படுத்திக் கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க மக்கள், டிரம்புக்கு எதிரான  போராட்டத்தை ஒருங்கிணைக்கும் “தேசிய எதிர்ப்பு தினமாக” இந்த தினத்தை அறிவித்தனர். மேலும் “இனி எங்களுக்கு மன்னர்கள் வேண்டாம்” என்ற முழக்கங்களுடன் நாடு முழுவதும் அணி திரண்டனர்.  இந்த போராட்டத்தை 50501 என்ற அமைப்பு ஒருங்கிணைத்தது. டிரம்புக்கு எதிரான போராட்டங்களை அரசு நிர்வாகமே கலவரமாக மாற்றி வருவதால் போராட்டக்காரர்கள் யாரும், அனுமதி பெற்றே வைத்தி ருந்தாலும் எந்த வகையான ஆயுதங் களையும் போராட்டக்களத்திற்கு கொண்டு வர வேண்டாம் என இணைய தளம் வாயிலாகவே 50501 அமைப்பு அறிவுறுத்தி இருந்தது. இவ்வாறு நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங்களிலும் 2000-க்கும் மேற்பட்ட நகரங்களில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள், டிரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதி ராகவும், போருக்காகவும் ராணுவத் திற்காகவும் மக்களின் பணத்தை பயன்படுத்தக்கூடாது; அத்தியாவசிய துறைகளுக்காண நிதிகளை வெட்டக் கூடாது எனவும் முழக்கங்களை எழுப்பினர்.