tamilnadu

ஒன்றிய அரசின் நிலைப்பாட்டால் ஊடகத் துறையில் வேலை இழப்புகள் அதிகரிப்பு

ஒன்றிய அரசின் நிலைப்பாட்டால்  ஊடகத் துறையில் வேலை இழப்புகள் அதிகரிப்பு

பினராயி விஜயன் குற்றச்சாட்டு

ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஊட கத்துறையில் வேலை இழப்புகளை அதி கரித்துள்ளது என கேரள முத லமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரள பத்திரிகை தொழி லாளர்கள் சங்கத்தின் (கேயு டபிள்யூஜே), பத்திரிகையா ளர்கள் நல நிதித் திட்டத்தை ஞாயிறன்று கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அப் போது அவர் பேசுகையில்,”பத் திரிகையாளர்களுக்கு சிறந்த சேவை மற்றும் ஊதிய நிலை மை களை உறுதி செய்யும்  “பணிபுரியும் பத்திரிகையா ளர்கள் சட்டம்” புதிய தொழிலா ளர் சட்டத்தொகுப்புடன் இணைக்கப்பட்ட பிறகு, ஊதிய வாரிய (வேஜி போர்டு) அமைப்பு ஒழிக்கப்படும் என்ற  அச்சம் உள்ளது. பத்திரிகை யாளர்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வரு கின்றனர். உலகளாவிய பத்திரிகை சுதந்திரக் குறி யீட்டில் நமது நாடு சரிந்துள்  ளது. போதுமான விவாதம்  கூட இல்லாமல் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்க ளைப் பாராட்டும் பத்திரிகை யாளர்கள் நாட்டில் உள்ளனர். இது பத்திரிகையாளர்களின் வேலைவாய்ப்பு உரிமை களை அச்சுறுத்துகிறது. அவர்  கள் ஒரே தொழிலாளர் வர்க் கத்தில் இருப்பதை நினைவில் கொள்வதில்லை. ஒன்றிய அர சிடமிருந்து ஊடகப் பாது காப்பு என்ற கேடயத்தை நாம்  எதிர்பார்க்கக்கூடாது. பல ஊடக நிறுவனங்களில், சொற்ப ஊதியத்திற்காக நாம் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. கேயுடபிள்யூஜெ மாநிலக்  குழுவின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரமான ‘பிரேக் கிங் டி’ எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனால் தொடங்கி வைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களின் கூட்  டத்தை தொழில்துறை அமை ச்சர் பி.ராஜீவ் தொடங்கி வைத் தார். ஓய்வு பெற்றவர்களை முதலமைச்சர் பினராயி விஜ யன், எதிர்க்கட்சித் தலைவர் டி.  சதீசன், தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் மற்றும்  டி.ஜே. வினோத் எம்.எல்.ஏ  ஆகியோர் கவுரவித்தனர். கூட்டத்திற்கு கேயுடபிள்யூஜெ மாநில தலைவர் கே.பி. ரெஜி  தலைமை தாங்கினார். ஹைபி  ஈடன் எம்.பி., டி.ஜே. வினோத் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங் கேற்றனர்.