ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து
சிபிஎம் புறக்கணிப்பு!
சென்னை, ஆக. 13 - ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தைப் புறக்கணிப்ப தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாகவும், தமிழக நல னுக்கு எதிராகவும், அரசிய லமைப்புச் சட்டத்திற்கு முரணாக வும் ஆர்.என். ரவி தொடர்ச்சி யாக செயல்பட்டு வருகிறார்.
உச்ச நீதிமன்றம் கூறியும் திருந்தாத ஆர்.என். ரவி
இந்த ஆண்டு, உச்ச நீதி மன்றம் ஆளுநர்களின் அதிகார வரம்பு குறித்து அறுதியிட்டுக் கூறிய பிறகும், திருந்த மறுத்து தனது நிலைபாடுகளையே மேற்கொண்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட கலைஞர் பல்கலைக்கழக மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உச்சநீதிமன்றம் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என தானடித்த மூப் பாக செயல்பட்டு வருகிறார். இந்த பின்னணியில், ஆளுநர் ஆர்.என். ரவியின் அணுகுமுறை யைக் கண்டித்தும், அவரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சுதந்தி ரத் தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணி ப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.