tamilnadu

img

மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்குக! விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு  ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்குக! விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி,ஜூன் 27- கள்ளக்குறிச்சி மாவட் டம், தியாகதுருகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு பிறகு, சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, “தமி ழகத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மா உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு மாம்பழத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வெறும் ரூ.4 கிலோ என்ற நிலை யில் உள்ளது. மா உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.4  ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும், ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது” என்றார். குறுவை தொகுப்பு திட்டம் தற்போது 5 ஏக்க ருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிக ளுக்கு மட்டும் வழங்கப்படும் குறுவை தொகுப்பு திட்டத்தை இரண்டரை ஏக்கர் நிலம் உள்ள விவ சாயிகளுக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். கூட்டுறவு தேர்தலை  நடத்தக் கோரிக்கை தமிழ்நாடு முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு 90 சதவீத நகை ஈடு கடனாக மட்டுமே வழங்கப்படுவதை கண்டித்து, பட்டா சிட்டா அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்றும், கூட்டுறவு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் மாநிலக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறினார். கரும்பு விவசாயிகள்  கரும்பு உற்பத்தி சாகுபடி பரப்பு குறைந்து வருவதற்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது கார ணம் என்று சுட்டிக்காட்டிய அவர், கூட்டுறவு ஆலை களை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், மூடப்பட்ட அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு ஆலை, அமராவதி கூட்டுறவு ஆலை ஆகியவற்றை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தார். விலை நிர்ணயம் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை ஒன்றிய அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி ரூ.3,110 அறிவிக்க வேண்டும் என்றும், தற்போது அறி விக்கப்பட்ட ரூ,2,369  விவசாயிகள் 700 ரூபாய் நட்டம் அடைகின்றார் என்றும் சாமி நடராஜன் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன், பொருளாளர் கே.பி.பெரு மாள், மாநில துணைத் தலைவர் பி.டில்லி பாபு, மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை, மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி, பொருளாளர் எம்.சி.ஆறுமுகம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தே. மலையரசன் வாழ்த்துரை வழங்கினார்.