மாநிலம் முழுவதும் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
சென்னை, அக். 7– கேங்மே ன்களை கள உதவியாளர்களாக மாற்றக் கோரி செவ்வா யன்று மாநிலம் முழுவதும் 12 மையங்களில் காத்தி ருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவி யாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு பதில் ‘கேங்மேன்’ எனும் புதிய பதவியை அரசு உரு வாக்கியது. 2019ஆம் ஆண்டு முதல் மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் 9,600-க்கும் மேற் பட்டோர் பணியாற்றுகின்றனர். களஉதவியா ளர்கள் செய்யும் பணிகளையே கேங்மேன்கள் செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இணை யான ஊதியம், பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. இந்நிலையில் கேங்மேன்களை நேரடியாக கள உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கு வதோடு, கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு உள்முகத் தேர்வில் வாய்ப்பு தர வேண்டும். 2019-2023 காலத்தில் மறுக்கப்பட்ட 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மின்னோட்டம் இல்லாத இடங்களில் மட்டுமே கேங்மேன்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 5 ஆயி ரம் கேங்மேன்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 12 மண்டல பொறியாளர் அலுவல கங்கள் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத் தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் தி.ஜெய்சங்கர் கூறுகையில், “மின்சாரம் செல்லாத இடங்களில் மட்டுமே பணி யாற்ற வேண்டும் என்ற நிபந்தனையோடு கேங்மேன் கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், ஆபத்தான மின் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் 80-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி உயிரிழந் துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வாரியத்திற்காக உழைத்தவர்களை, கேங்மேன் களை கள உதவியாளர்களாக பணி உயர்வு செய்து விட்டு, அதற்கு பிறகு ஐடிஐ படித்தவர்களை கொண்டு நிரப்புவதில் சங்கத்திற்கு ஆட்சேபணை இல்லை. கேங்மேன்கள் களஉதவியாளர் என்ற உத்தரவு கிடைக்காமல் காத்திருப்பு போராட் டத்தை கைவிட மாட்டோம்” என்றார். இந்தப் போராட்டத்தில் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன், பொருளாளர் வெங்கடேசன், துணைப் பொதுச் செயலாளர் ரவிக்குமார், மாநிலச் செயலாளர் கணேஷ்ராவ், காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர் ஏ.முருகா னந்தம், மின்துறை பொறியாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் அருள்குமார் உள்ளிட்டோர் பேசினர்.