நீதிமன்றம் கண்டித்தும் ஆர்.என். ரவி மாறவில்லை!
முதல்வர் சாடல்
சென்னை, ஜூன் 16- தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவி மாறவில்லை என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரூ. 325 கோடியே 96 லட்சம் மதிப்பிலான 2, 461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும் ரூ. 309 கோடியே 48 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 4,127 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 383 பயனாளிகளுக்கு 558 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பிற மாவட்டங்களிலும் சிறப்புத் தொகுப்புத் திட்டம் இதைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், “டெல்டா அல் லாத மாவட்டங் களில் நெல் சாகு படி விவசாயி களுக்காக கார்- குறுவை- சொர்ணவாரி பருவத்துக்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல் படுத்தப்படும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள 8 லட்சம் விவசாயிகளுக்கும் இந்த சிறப்புத் தொகுப்பு திட்டம் வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார். உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் பூதலூர் வட்டத்தில் உயர் கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் மதகுகள் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கப்படும். தென் பெரம்பூர் அருகே வெண்ணாறு மற்றும் வெட் டாறு பிரியும் இடத்தில் ரூ. 42 கோடியில் புதிய பாலம் அமைக்கப் படும். ஈச்சங்கோட்டை முதல் வெட்டிக்காடு கல்லணை கால்வாய் சாலை ரூ. 40 கோடி செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். மசோதா விவகாரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் கலைஞர் பெயரிலான புதிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா மே 2 அன்று ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதற்கு 40 நாட்களுக்கு மேலாகியும் ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது குறித்து கண்டனம் தெரிவித்த முதலமைச்சர், உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் ஆளுநர் ஆர்.என். ரவி மாறாமல் இருக்கிறார். உயர்கல்வித் துறை அமைச்சருக்கு சந்திப்பு நேரம் வழங்க மறுக்கிறார் என்று விமர்சித் தார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்ட மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.