tamilnadu

img

கம்யூனிஸ்ட் பிரச்சனை அல்ல; மக்கள் பிரச்சனை

பி.சம்பத் 

மத்தியக்குழு உறுப்பினர் - சிபிஐ (எம்)

விழுப்புரம் மாவட்டம், காங்கேயனூர் கிராமத்தில் அமைந்துள்ளது திரௌபதி அம்மன் கோவில். இக்கோவிலில் தலித் மக்களை வழிபாடு நடத்த அனுமதிப்பதில்லை. இப்பிரச்சனையை கையில் எடுத்து சிபிஐ(எம்) மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி களத்தில் இறங்கின.
தோழர் சீனிவாசராவ் நினைவு தினமான 30.09.2008இல் திரௌபதி அம்மன் கோவிலில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என அறிவித்தன சிபிஐ(எம்) மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி. இப்போராட்டத்தில் பங்கேற்பதற் காக 500 பெண்கள் உட்பட 1500க்கும் மேற்பட்ட வர்கள் அணிதிரட்டப்பட்டனர். இவர்களில் கணிசமானவர்கள் தலித் மக்கள். போராட் டத்திற்கு கே.பாலகிருஷ்ணன் (சிபிஐஎம் இன்றைய மாநில செயலாளர்) தலைமை யேற்றார். ஜி.லதா எம்.எல்.ஏ., மாவட்டச் செய லாளர் ஜி.ஆனந்தன், மாவட்டத் தலைவர்கள் பி.சுப்பிரமணியம், வி.ராதாகிருஷ்ணன், பூவ ராகவன், ஏழுமலை, கலியன் உள்பட பலரும் பங்கேற்றனர். ஆலயப் பிரவேசத்திற்கு காங்கேயனூர் ஊர் எல்லையிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் சென்றவர்களை செல்லும் வழியில் சாலையில் வழிமறித்தனர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ் தலைமை யிலான காவலர்கள். இதைத் தொடர்ந்து கே. பாலகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி.அமல்ராஜ் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. “அமைதியான முறையில் சட்டப்பூர்வமாக கோவிலுக்கு செல்பவர்களை ஏன் தடுக் கிறீர்கள்” என கே.பாலகிருஷ்ணன் ஆவேச மாக கேட்டார். “ஆலய நுழைவிற்கு அனுமதி இல்லை. சட்டத்தை மீறுவதால் தடுப்பதாக” கூறினார் எஸ்.பி. “கோவிலுக்கு செல்வதற்கு தடை உத்தரவா? அதைக் காட்டுங்கள்” என கே. பாலகிருஷ்ணன் கேட்க இருவருக்கும் வாக்கு வாதம் கடுமையாகியது.

எஸ்.பி.க்கு தனது வாதத்தின் சட்டப்பூர்வ நியாயத்தை விளக்க முடியவில்லை. இந்நிலையில் கோவிலுக்கு ஊர்வலம் தொடர்ந்து செல்லும் என பால கிருஷ்ணன் கூறவே, தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க உத்தரவிடுகிறார் அமல்ராஜ். கடுமையான தடியடியில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்த னர். பங்கேற்றவர்களில் கே.பாலகிருஷ்ணன் உள்பட 103 பேரை தேர்வு செய்து காவல்துறை யினர் கைது செய்தனர். பின்னர், இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்படுகின்ற னர். இரண்டு வாரம் கழித்துத்தான் சிறையி லிருந்து அதுவும் ஜாமீனில் வெளியே வரு கின்றனர். ஆக தலித் மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றதற்காக சிபிஐ(எம்) - தீண் டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களையும், ஊழியர்களையும் தடியடி நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தது அன்றைய தமிழக அரசு. சமூக நீதி, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் தமிழக அரசின் இந்த அநீதி யான நடவடிக்கையை கண்டித்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியில் தமிழக அரசு வழிக்கு வந்தது. தலித் மக்களை திரௌபதி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. 20.10.2008இல் தலித் மக்கள் செங்கொடி இயக்க தோழர்கள் புடைசூழ திரௌபதி கோவி லில் நுழைந்து வழிபட்டனர்.

அரசு வரு வாய்த்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர். காலம் காலமாக மறுக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோவில் வழிபாட்டு உரிமை சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டங்களால் தலித் மக்க ளுக்கு மீட்டுத் தரப்பட்டது. தங்களது நீண்ட கால கனவு நிறைவேறியதையொட்டி தலித் மக்கள் உணர்ச்சிப்பூர்வமாக வழிபாடு நடத்தி னர். சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களுக்கு தங்களது நன்றியையும், பாராட்டுகளையும் வெளிப்படுத்தினர். *    நாகப்பட்டினம் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது ஏகாம்பர ஈஸ்வரர் கோவில். இக்கோவிலுக்குள்ளும் தலித் மக்களை காலம் காலமாக அனு மதிப்பதில்லை. அனுமதித்தால் கோவிலில் தீட்டுப்பட்டு விடுமாம். இது சாதிய வாதிகள் நெடுங்காலமாக பரப்பி வரும் பொய்மை யான கூற்று. தமிழக அரசு நிர்வாகமும் இப்பிரச்சனையை கண்டுகொள்ள வில்லை. தலித் மக்கள் சில முறை கோவி லுக்குள் நுழைய முயன்று தமிழக அரசு நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில், 30.09.2008இல் சீனிவாச ராவ் நினைவு தினத்தன்று இக்கோவிலில் தலித்  மக்களின் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என அறிவித்தன சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணி. ஏராளமான தலித் மக்களோடு செங்கொடி இயக்க தோழர்களும் அணி திரண்டனர். தோழர் பி.சம்பத் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்கள் நாகை மாலி, வே.மாரிமுத்து, வீ.அமிர்தலிங்கம் உட்பட பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். ஊர்வலம் ஏகாம்பர ஈஸ்வரர் கோவிலை அடைந்தபோது, கோவில் வாசலில் காவல் துறையினர் வழிமறித்து அணிவகுத்து நின்றனர்.

ஆம். சட்டத்தை அமல்படுத்த வேண் டிய காவல்துறை சட்டத்தை அவமதித்து ஆல யத்திற்குள் நுழைய விடாமல் “போலீஸ் சுவர்” அமைத்தது. தலைவர்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. எனினும், சட்டத்தை மீறும் நிலையில் காவல்துறை உறுதியாக இருந்தது. கோவிலுக்குள் விடாப்பிடியாக நுழைய முயன்ற தலைவர்களையும், தலித் மக்களை யும் பலவந்தமாக காவல்துறை கைது செய்தது. அது மட்டுமல்ல, கோவிலையே இழுத்துப் பூட்டி சீல் வைத்துவிட்டது. கோவிலுக்கு வந்த வர்களை காவல்துறையினரே தடுத்து அனுமதிக்க மறுத்ததுடன் - குதிரை கீழே தள்ளியதுடன் குழி பறித்த கதையாக - கோவிலை பூட்டிய நிகழ்வு அவ்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் சட்டப் பாதுகாப்பு - சமூக நீதியின்பால் அக்கறை உள்ள  அனைவரும் காவல்துறையின் நட வடிக்கைகளை வன்மையாக கண்டித்தனர். காவல்துறையின் சட்ட விரோத செயல்பாடு விரிவான மக்கள் திரளுக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, மாநில அரசின் உயர் மட்டத் தலைமைக்கும் கொண்டு செல்லப் பட்டது. நடந்த அநீதியை உணர்ந்த தமிழக அரசு வேறு வழியின்றி கோவிலை திறக்கவும், தலித் மக்களை உள்ளே அனுமதிக்கவும் முடிவு செய்தது. 27.10.2009 அன்று எந்த செங்கொடி இயக்கத் தலைவர்களை காவல்துறை கைது செய்ததோ, அந்த செங்கொடி இயக்க தோழர்கள் உடன் வர காவல்துறையினர் முன்னிலை வகிக்க கோவிலை நோக்கி அணிவகுத்து வந்தனர் தலித் மக்கள். ஆனால், என்ன விபரீதம்? செல்லும் வழியில் ஓரிடத்தில் திரண்டிருந்த சாதிய சக்திகள் கோவிலுக்கு சென்றவர்கள் மீது தொடர்ச்சியான கல்லெறி தாக்குதலை நடத்தினர்.

இதில் தலித் மக்கள் - செங்கொடி இயக்கத் தோழர்கள் சிலர் காயமடைந்தனர். சில காவல்துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. கல்லெறி தாக்குதலை எதிர்கொண்டபோதும் ஆலய நுழைவை கைவிடவில்லை செங்கொடி இயக்கமும், தலித் மக்களும். தடைகளை தாண்டி ஆலயத்திற்குள் நுழைந்த தலித் மக்களின் உணர்வை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இத்தனை காலமும் அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வு கள் பிரவாகமாக வெளிப்பட்டன. புதிய உத்வே கத்துடனும், நம்பிக்கையோடும் தலித் மக்கள் வழிபாடு நடத்தினர். இந்த உரிமையை பெற்றுத் தந்த சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக் களையும், நன்றியையும் வெளிப்படுத்தினர். *    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள கிராமம் வெள்ளையா புரம். இங்குள்ள கோவிலில் தலித் மக்களை அனுமதிப்ப தில்லை. ஒருமுறை கோவிலுக்கு தலித் மக்கள் சென்ற போது காவல்துறையினரால் அடித்து வெளியேற்றப்பட்ட னர். மாவட்ட அரசு அதிகாரிகளிடம் இதுகுறித்து சிபிஐ (எம்) சார்பாக புகார் செய்தோம். அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மௌனம் காத்தனர். செங்கொடி இயக்கம் தீண்டாமை ஒழிப்பு கடமையை உறுதியாக நிறைவேற்றும். என்றுமே தொட்ட பிரச்ச னையை நிறைவேற்றாமல் விட்டதில்லை. எனவே, 11.12.2000 ஆம் ஆண்டு பாரதியார் நினைவு தினத்தன்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ஆலயப் பிரவேசத்தை அறிவித்தோம். பல நூற்றுக்கணக் கான தலித் மக்களும் செங்கொடி இயக்க தோழர்களும் அணி திரண்டனர். மீண்டும் அரசு நிர்வாகமும், காவல்துறையும் படை திரண்டு வந்து தடுத்தன. ஆனாலும், காவல்துறை யின் தடையை தகர்த்து ஆலயத்திற்குள் நுழைந்தோம். தோழர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், எஸ்.பாலசுப்ரமணி யம், வே.சாமுவேல்ராஜ், கே.அர்ஜூனன், பி.சுகந்தி, சுப்பாராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தலித் மக்கள் தங்களது நெடுங்கால கனவு நிறைவேறி யது என்ற உணர்வுடன் உணர்ச்சிகரமாக வழிபாடு நடத்தினர். அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.  ஆயினும், அந்தோ ! சாதிய சக்திகள் அடைந்த ஆத்திரத் திற்கு அளவே இல்லை.

கோவில் தீட்டுப்பட்டுவிட்டதாக அறிவித்து விட்டனர். இவ்வாறு கூறி சாதி இந்துக்கள் இக்கோவிலில் வழிபாடு நடத்துவதையே புறக்கணித்து வருகின்றனர். இது வருந்தத்தக்க ஒரு நிகழ்வு தான். சாதி அமைப்பு எந்த அளவு மக்களிடையே பகைமையை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். மறுபுறம், தலித் மக்கள் தங்களது வழிபாட்டு உரிமையை இக்கோவிலில் இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். மேற்கண்ட ஆலயங்கள் மட்டுமல்ல, இன்னும் ஏராளமான கோவில்களில் தடைகளையும், தாக்குதல் களையும் எதிர்கொண்டு தலித் மக்களின் ஆலயப் பிர வேசத்தை உறுதிப்படுத்தியது செங்கொடி இயக்கம். திருவண்ணாமலை மாவட்டம் இளங்குன்னி, பெரம்பலூர் மாவட்டம் அழகாபுரம், பாதாங்கி, நாகை மாவட்டம் விழுந்தமாவடி, தூத்துக்குடி மாவட்டம் ஊத்துப்பட்டி, விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி, நெல்லை மாவட்டம் வெள்ளங்குழி, காசிமேஜபுரம், படர்ந்த புளி, புதுக்கோட்டை மாவட்டம் பெருநாயனூர், கோவை மாவட்டம் பல்லடம் ஒன்றியம் மலைக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் கொங்கவேம்பு, ஈரோடு மாவட்டம் நசியனூர், விழுப்புரம் மாவட்டம் வீரபயங்கரம், சின்னசேலம், திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களில் சாதிய சக்திகளின் எதிர்ப்புகளை முறிய டித்து தலித்துகளின் ஆலயப் பிரவேசத்தை வெற்றிகர மாக்கியது செங்கொடி இயக்கம். இன்னும் பல கிரா மங்களை சொல்ல முடியும். கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட்டுகள் தலித் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்லலாமா? என சிலர் கேட்கிறார்கள். இது கம்யூனிஸ்ட்டுகளின் நம்பிக்கை குறித்த பிரச்சனை அல்ல. தலித் மக்களின் ஜனநாயக உரிமை குறித்த பிரச்சனை. வழிபாட்டு உரிமை என்பது அவர்கள் உணர்வு சார்ந்த சட்டப்பூர்வமான உரிமை. இந்த உரிமையை நிலைநாட்ட ஏற்கனவே தலையிட்டவை மட்டுமல்ல எதிர்காலத்திலும் இத்தகைய பிரச்சனைகளில் தொடர்ந்து தலையிடுவோம். தலித் மக்களுக்கு இதர மக்களோடு சமத்துவத்தை நிலைநாட்டும் போராட்டங்களை நடத்தாமல் உழைக்கும் வர்க்க ஒற்றுமை சாத்தியமல்ல.  உழைக்கும் வர்க்க ஒற்றுமையில் அக்கறை உள்ள கம்யூனிஸ்ட்டுகள் தலித் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்.