தஞ்சாவூரில் ரூ.1,194 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
தஞ்சாவூர், ஜூன் 16 - தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் மொத்தம் ரூ.1,194 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார். இதில் 2,461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 4,127 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,25,383 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விவசாயிகளுக்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.82.77 கோடியும், டெல்டா மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங் களில் நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்திற்கு ரூ.132.17 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக முத லமைச்சர் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டத் தில் மட்டும் 56,000 விவசாயிகளும், தமிழ கம் முழுவதும் 8 லட்சம் விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். “உங்களுடன் ஸ்டாலின்” புதிய திட்ட அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி முதல் “உங்க ளுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் தொடங் கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார். இதன் கீழ் நகரப் பகுதிகளில் 3,768 முகாம் களும், கிராமப் பகுதிகளில் 6,232 முகாம் களும் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறை கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட மகளிரும் இதில் விண்ணப்பம் செய்யலாம். மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இந்த சிறப்பு முகாம் அக்டோபர் மாதம் வரை நடை பெறும். எதிர்க்கட்சி தலைவர் மீது கடுமையான விமர்சனம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமியை கடுமையாக விமர்சித்த முதல மைச்சர், “உட்கட்சி பிரச்சனை, கூட்டணி பிரச் சனையை மனதில் வைத்து எடப்பாடி பழனி சாமி புலம்பி வருவது தெரிகிறது” என்றார். ஸ்டாலின் திட்ட மனுக்கள் குறித்து கேட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்த முதல மைச்சர், “4 லட்சத்து 17 ஆயிரம் மனுக்களில் பெரும்பாலானவைக்கு விரைவில் தீர்வு காணப் பட்டது. இதனை அவரால் பொறுக்க முடிய வில்லை” என்றார். ஆளுநருக்கு கண்டனம் தமிழக ஆளுநரை “ஒன்றிய அரசின் கைப்பாவை” என்று குறிப்பிட்ட முதலமைச்சர், “உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் திருந்த வில்லை” என்று கடுமையாக விமர்சித்தார். கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை 40 நாட்களாக ஆளுநர் அனுமதிக்காமல் காலம் தாழ்த்துவதாக குற்றம் சாட்டினார். “பொறுத்தது போதும், நாம் பொங்கி எழுந்தால் அவர் தாங்க மாட்டார்” என்று எச்சரித்தார். ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு “ஒன்றிய அரசு நமக்கு தர வேண்டிய நிதியை கொடுக்காமல் வஞ்சகம் செய்கிறது. இதையெல்லாம் தாண்டி எமது ஆட்சி வெற்றி நடைபோட்டு வருகிறது” என்று முதலமைச்சர் தெரிவித்தார். தனது அரசியல் பயணத்தை குறிப்பிட்ட அவர், “பல்வேறு சோதனைகள், தடைகளை பார்த்தவன் நான். மிசாவையே பார்த்தவன். எதற்கும் அஞ்ச மாட்டேன்” என்று கூறினார். கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களையும் முதல மைச்சர் அறிவித்தார். தென்பரம்பூர் ஏரியில் ரூ.42 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும். ஈச்சங்கோட்டை-வெட்டிக்காடு சாலை ரூ.40 கோடியில் அகலப்படுத்தப்படும். உய்யக் கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் புனர மைக்கப்படும். சரஸ்வதி மஹால் நூலகத் திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.75 லட்சம் ஆண்டு மானியம் உயர்த்தப்படும். கலைஞர் நினைவுப் பணிகள் விழாவின் போது தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புதிதாக நிறு வப்பட்ட கலைஞர் திருவுருவச் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர், “கலைஞரை யும், தஞ்சையும் பிரித்துப் பார்க்க முடியாது” என்று குறிப்பிட்டார். பெரியகோவில் 1000 ஆண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை கலைஞர் செயல்படுத்தியதையும் நினைவு கூர்ந்தார். இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் உள்ளிட்ட பல அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.