நாடு முழுவதும் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு!
அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டது ஒன்றிய அரசு
புதுதில்லி, ஜூன் 16 - இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்து வதற்கான முறைப்படியான அறி விக்கையை ஒன்றிய அரசு திங்கட் கிழமை (ஜூன் 16) அன்று அரசிதழில் வெளியிட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக் கான தயாரிப்பு தொடர்பாக, ஒன்றிய அரசின் மூத்த அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயி றன்று ஆலோசனையில் ஈடுபட்டார். ஒன்றிய உள்துறை செயலாளர், பதிவாளர் ஜெனரல், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருதுஞ்சய் குமார் நாராயண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்தே, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம்-1948-இன் 3-வது பிரிவின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முறைப்படியான அறிவிக்கை திங்களன்று வெளியாகி யுள்ளது. அந்த அறிவிக்கையில், “லடாக், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள், இமாசலப் பிரதேசம் மற்றும் உத்தர கண்ட் ஆகிய மாநிலங்களின் பனிப் பொழிவு பகுதிகளைப் ‘அக்டோபர் 1, 2026’ என்ற தேதியை அடிப்படை யாகக் கொண்டும், லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம், இமாசலப் பிரதேசம், உத்தர கண்ட் மாநிலங்களின் பனிப்பொழிவுஇல்லாத பகுதிகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைப் பொறுத்தவரை ‘மார்ச் 1, 2027’ என்ற தேதியை அடிப்படை யாகக் கொண்டும் 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். நாடு முழுவதிலும் இருந்து மக்கள் தொகை தொடர்பான தரவுகளை திரட்டும் இந்த மிகப்பெரிய பணியில் சுமார் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், சுமார் 1.3 லட்சம் கணக்கெடுப்பு அதிகாரிகள் டிஜிட்டல் சாதனங்களுடன் ஈடுபடு வார்கள். மக்கள் தொகை கணக் கெடுப்பின்போது, சாதி கணக் கெடுப்பும் நடத்தப்படும்” என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் தொகை கணக் கெடுப்பானது, இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வீட்டின் நிலை, சொத்துக் கள் மற்றும் வசதிகள் தொடர்பான வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு (House Listing Operation-HLO) ஒரு கட்டமாகவும், ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் உள்ளனர், அவர்களின் சமூக - பொருளாதார, கலாச்சாரம் உள்ளிட்ட பிற விவரங்கள் தொடர் பான மக்கள்தொகை கணக்கெடுப்பு (Population Enumeration-PE) மற்றொரு கட்டமாகவும் நடத்தப் படும். மக்கள் தொகை கணக் கெடுப்பின்போது சாதிகளைப் பற்றிய கணக்கெடுப்பும் பதிவு செய்யப்பட உள்ளது. 2011-ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இருகட்டங் களாக நடத்தியது. இந்தக் கணக் கெடுப்பின்போது, 1931-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக சாதிவாரி விவரங்களும் சேரிக்கப் பட்டன. ஆனால், அவை வெளியிடப்பட வில்லை. இதன் காரணமாக, 2021-ஆம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப் போடு சேர்த்து, சாதிவாரி கணக்கெடுப் பும் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. 2014-இல் அதிகாரத்தைக் கைப் பற்றிய நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு, 2021-இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே நடத்தவில்லை. கொரோனா சூழலைக் காரணம் காட்டிக் கொண்டது. அதற்குப் பிந்தைய நான்காண்டுகளிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில் தான், பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில், கடந்த ஏப்ரல் 30 அன்று அரசியல் விவ காரங்களுக்கான ஒன்றிய அமைச்சர வைக் கூட்டத்தில், “எதிர்வரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி விவரங்களையும் சேகரிப்பது” என முடிவு எடுக்கப்பட்டது. பீகார் தேர்தலுக்காக இந்த முடிவை மோடி அரசு எடுத்தது. தற்போது அதையே அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.