பிரச்சார இயக்கம் : மதுக்கூர் இராமலிங்கம் துவக்கி வைத்தார்
ஒன்றிய பாஜக அரசின் மதவெறி - மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், விடுபட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மாநில திமுக அரசை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக, மதுரை எச்எம்எஸ் காலனியில் திங்களன்று நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், இரா.லெனின், பகுதிச் செயலாளர் பி.வீரமணி, போக்குவரத்து இடைக்கமிட்டி செயலாளர் எஸ்.அழகர்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கு.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.