மதுரை புறநகர் மாவட்ட செந்தொண்டர்களுக்கு பாராட்டு விழா
மதுரை, ஜூன் 9- கடந்த ஏப்ரல் 2-6 தேதிகளில் மதுரை யில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநா ட்டில் செந்தொண்டர் பேரணியில் மதுரை புறநகர் மாவட்டத்திலிருந்து பங்கேற்றவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி வி.ஆர். கிருஷ்ணய்யர் மகா லில் ஞாயிறன்று மாலை நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்டச் செய லாளர் கே. ராஜேந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி. சமையன் வரவேற் புரை நிகழ்த்தினார். மாநில செயற் குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோர் செந் தொண்டர்களை பாராட்டி உரையாற்றி னர். மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலா, த.செல்லக்கண்ணு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் தமிழரசன், பிருந்தா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பெ.சண்முகம் பாராட்டு நிகழ்ச்சியில் நிறைவுரை நிகழ்த்திய கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், “மதுரையில் நடைபெற்ற 24ஆவது அகில இந்திய மாநாடு கட்சியின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமான கூட்டத்தை கண்டது. 60 ஆண்டுகால கட்சி வரலாற்றில் இல்லாத அளவுக்கான திரட்டுதலை நாம் நிகழ்த்தினோம்” என்று குறிப்பிட்டார். வாச்சாத்தி பெண் போராளிகள் செந்தொண்டர் அணிவகுப்பை துவக்கி வைத்த சிறப்பை எடுத்துரைத்த அவர், “30 ஆண்டுகளுக்கு மேலாக பாலி யல் வன்கொடுமைக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற வாச்சாத்தி பெண் போரா ளிகள் நமது அணிவகுப்பை துவக்கி வைத்தது கட்சியின் மதிப்புகளை பிரதிபலிக்கிறது” என்றார். இளைஞர் சேர்க்கைக்கு அழைப்பு “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சோச லிச சமூகம் உருவாக்கும் இலக்குடன் செயல்படும் கட்சியின் மாநாட்டில் நீங்கள் கலந்துகொண்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று சண்முகம் பாராட்டினார். 1972இல் மதுரையில் நடைபெற்ற ஒன்பதாவது அகில இந்திய மாநாட்டில் 10 வயது சிறுவனாக கலந்துகொண்ட தோழர் பால்ச்சாமி தற்போது கட்சியின் முக்கிய தலை வராக விளங்குவதை உதாரணமாக காட்டி, இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வரும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சியில் செந்தொண்டர் அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசு கேடயங்கள் வழங்கப்பட்டன. மாநில செயலாளர் பெ. சண்முகம் கட்சியின் மாநில குழு சார்பில் அனைத்து செந் தொண்டர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரி வித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார். மாநாட்டின் முகப்பில் வைக்கப் பட்டிருந்த காரல் மார்க்ஸின் சிலை தற்போது சென்னையில் உள்ள கட்சி மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ளதாகவும், தினமும் பலர் அங்கு வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.