மீன்பிடி தொழிலாளர் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு
இராமநாதபுரம், ஜூன் 10- இராமநாதபுரம் மாவட்டம் இரா மேஸ்வரத்தில் அகில இந்திய மீன்பிடி மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் கூட்ட மைப்பு சார்பாக ஆகஸ்ட் 5 பேரணி மற்றும் பொதுக்கூட்டமும், ஆகஸ்ட் 6,7 தேதிகளில் 4 ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி இராமேஸ்வரத்தில் வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் தமிழ் நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் எம்.கருணாமூர்த்தி தலை மையில் நடைபெற்றது. இதில் கேரள மாநில மீன் வளர்ச்சித்துறை தலைவர் டி.மனோகரன், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார், மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிஐடியு மாவட்ட பொருளாளர் முத்து விஜயன், அந்தோணி, ஜெயசங்கரன், முருகவேல், செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வரவேற்புக்குழு தேர்வு ஜி.செலஸ்டின் தலைவராகவும், எம்.கருணாமூர்த்தி செயல் தலைவராகவும், எம்.சிவாஜி செயலாளராகவும், ராமச் சந்திரபாபு பொருளாளராகவும், 31 நபர் துணை தலைவர்களாகவும், 31 நபர் துணை செயலாளர்களாகவும் உள்ளிட்ட 140 உறுப்பினர் கொண்ட வரவேற்புக் குழு தேர்வு செய்யப்பட்டது.