ஊத்தங்கரை, மார்ச் 14- பல ஆண்டுகள் வீடுகட்டி குடியி ருப்போருக்கு மனைப்பட்டா வழங்குமாறு அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் காட்டேரி யில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குறவர் இன மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் மேற்பார்வையில் அளித்த இடத்திற்கு பட்டா, தெருவிளக்கு, சுகாதாரமான கழிப்பறைகள் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலை நாட்கள் குறைப்பதுடன், பணியாற்றிய 6 மாதங்களுக்கு மேலாக கூலி வழங்கப்படவில்லை. இதேபோல் சில இடங்களில் கூலியை குறைத்து வழங்கி மோசடி செய்யப்பட் டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு ஊழல் செய்தவர் களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் எத்திராஜ், சுப்ரமணி, மொளுகு, வெங்கடாசலம், ரத்தினம்மா, சுரேஷ், சிந்தாமணி, ருக்குமணி, இளயராணி, குப்பன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், விவசாயத் தொழிலாளர்களின் 600க்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக் களை ஆட்சியரிடம் வழங்கப் பட்டது. மனு பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித் தார்.