tamilnadu

img

காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், துறை சார்ந்த பணிகள் தவிர வேறு பணிகள் செய்ய நிர்ப்பந்திக்கக் கூடாது, ரூ. 3,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை 50 ஆயிரம் வழங்க வேண்டும், 7ஆவது நிதிக்குழு  பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி  ஊழியர்கள் ஊத்தங்கரை, ஓசூர் விஸ்வநாதபுரம், தளி, ஆகிய மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்  தலைவர் கோவிந்தம்மா, செயலாளர் புவனேஸ்வரி, துணைத் தலைவர் கல்லூரி, இறை செயலாளர் அலமேலு, அரசு  ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயராமன், முன்னாள் நிர்வாகி தண்டபாணி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினார்கள்.