tamilnadu

img

தனியார் ஆய்வகங்களில் ‘வாக் இன் கோவிட்-19’ சுயமாகவே ஆய்வுக்கு உட்படுத்தும் திட்டம்

திருவனந்தபுரம், ஆக.13- கேரளத்தில் அங்கீக ரிக்கப்பட்ட ஆய்வகங்களில் சுயமாகவந்து ‘வாக் இன் கோவிட் -19’ பரிசோதனை செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் தெரிவித்தார். ஆர்டிபிசிஆர், எக்ஸ்ப ர்ட் நாட், ட்ரூ நாட், ராப்பிட் ஆன்டிஜன் டெஸ்ட் போன்ற கோவிட் பரிசோதனைகளை அரசு  அறிவித்துள்ள கட்டணத்தில் தனியார் மருத்து வமனைகளும், ஆய்வகங்களும் ஏற்கனவே  அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொ டர்ந்து வாக் இன் கோவிட்- 19 பரிசோ தனை நடத்த பலரும் முன்வந்த னர். கோவிட் பரவிவரும் சூழ்நி லையில் விரிவான பரிசீலனையை அரசு மேற்கொண்டது. அதன்படி தனியார் ஆய்வகங்களுக்கு அத ற்கான அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் அர சின் அங்கீகாரம் பெற்ற தனியார்  மருத்துவமனைகளிலும் ஆய்வ கங்களிலும் கோவிட் பரிசோதனை செய்துகொள்ளலாம். இதன் மூலம் முன்னதாகவே நோயை கண்டறி யவதும், பயனுள்ள சிகிச்சையை உடனே பெறுவதும் சாத்தியமாகும் என அமைச்சர் கூறினார்.