tamilnadu

img

மணல் அகற்றிய பம்பா நதி அமைதியாக ஓடியது மக்களை பாதுகாக்க உதவிய அரசின் தலையீடு

பத்தனம்திட்டா, ஆக.11- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற் பட்ட பெருவெள்ளத்தின்போது குவிக்கப் பட்ட மணல்மேடுகள் அகற்றப்பட்டதால் இம் முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதி லும் பம்பா நதி அமைதியாக ஓடியது. பம்பா ஆற்று மணல் அகற்றலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பெரும் குற்றச்சாட்டு களை கூறின. ஆனால் இந்த முறை, பம்பா நதிக்கரைகள் மூழ்காமல் இருக்க அரசின் தொலைநோக்கு தலையீடு உதவியது. பம்பா அணையின் இரண்டு மதகுகளும் ஞாயிறன்று மதியம் 1.30 மணிக்கு திறக்கப் பட்டு தண்ணீர் வெளியேறத் தொடங்கியது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று மத்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக அணை திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்ட ஆறு மணி நேரத்திற்குப் பிறகு ராண்ணிக்கு தண் ணீர் வரும் என்று மக்கள் எச்சரிக்கப்பட்ட னர். இருப்பினும், பம்பா திரிவேணி உள் ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வில்லை. 2018ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது குவிந்திருந்த சுமார் 75,000 கியூபிக் மீட்டர் மணல் மற்றும் குப்பைகள் பம்பா நதியிலிருந்து அகற்றப்பட்டன. இது பம்பா திரிவேணி பகுதியில் 2.2 கிலோமீட்டர் தூரம் அமைதியாக வெள்ளம் கடந்து செல்ல உதவியது. பம்பா மட்டுமல்லாது 3 முக் கிய நதிகளின் 44 பகுதிகளில் குவிந்த குப்பைக் கழிவுகளும் அகற்றப்பட்டன. மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்ததன் அடிப்படையில இந்த மண லும் குப்பைக் கழிவுகளும் அகற்றப்பட்டன.
தோட்டப்பள்ளி பொழிமுகம்
இதுபோல் ஆலப்புழா மாவட்டம் தொட்டப்பள்ளி பொழிமுகத்தில் உள்ள தடையை காங்கிரஸ், பாஜக எதிர்ப்பை மீறி அகற்றியதன் மூலம், வினாடிக்கு 620 கன அடி நீர் கடலில் பாய்கிறது. ஆறுகளில் நீர்மட்டம் பெருவெள்ளத்தின் போது இருந்த அளவுக்கு உயரவில்லை. மே-ஜூலை மாதங்களில், பொழிமுகத்தில் மரங்களை அகற்றியும் மணல் மேடுகளை அகற்றியும் அகலம் 393 மீ ஆக விரிவுபடுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கசிவு பாதையின் 40 மதகுகளில் பாயும் நீர் பொழிமுகம் வழி யாக எளிதில் கடலில் கலக்கத் தொடங்கி யது. இதன் மூலம் குட்டநாடு, செங்கன்னூர், மாவேலிகாரா மற்றும் கார்த்திகப்பள்ளி தாலுகாக்களில் நீர்மட்டம் குறைந்தது. கிழக் கிலிருந்து நீர் வருகை மற்றும் பம்பா அணை திறக்கப்பட்ட போதிலும், தொட்டப் பள்ளியில் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அச்சு றுத்தலை ஏற்படுத்தவில்லை.