tamilnadu

கோவிட் தடுப்புக்காக  980 மருத்துவர்கள் 3 மாதங்களுக்கு தற்காலிக நியமனம்

 திருவனந்தபுரம், மே 6- கோவிட் 19 நோய் தடுப்பை மேலும் வலுப் படுத்துவதன் ஒரு பகுதியாக 980 மருத்துவர்கள் மூன்று மாதங்களுக்கு தற்காலிக அடிப்படையில் உடனடியாக நியமனம் செய்ய உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மருத்துவ பயிற்சி முடித்த வர்கள் பணியில் சேரும் நாளிலிருந்து 90 நாட்களுக்கு இந்த நியமனம் அனுமதிக்கப் படுகிறது. கேரளத்திற்கு வெளியே உள்ள மலையாளிகள் திரும்பி வருவதற்குள் சிகிச் சைக்கான ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்ல மழைக் காலம் வருவதால் தொற்று நோய்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. கோவிட் பரிசோத னையைத் தொடர்ந்து பலருக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். கண்காணிப்பில் உள்ளவர்க ளுக்கு போதிய கவனிப்பும் அளிக்க வேண்டும். எனவே, கீழ் நிலையில் உள்ள மருத் துவமனைகளை வலுப் படுத்த வேண்டும். இதை முன்னுணர்ந்தே அதிக எண்ணிக்கையில் மருத்து வர்களை மூன்று மாதங்க ளுக்கு நியமனம் செய்வதாக வும் அவர் கூறினார். ஆரம்ப சுகாதார மையங்களிலும் சமுதாய சுகாதார மையங்க ளிலும் இவர்கள் பணி நிய மனம் செய்யப்படுவார்கள் எனவும் முதல்வர் கூறினார்.