நாகர்கோவில், ஜூன் 3- வெளிமாநிலம், வெளி மாவட் டங்களுக்கு சென்று திரும்பும் ஓட்டுநர்கள் தனிமைப்படுத்தப் படுகின்றனர். வறுமையில் வாடும் தொழிலாளர்களிடமிருந்து தனி மைப்படுத்தலுக்கான செலவீன தொகை வசூலிப்பதை கைவிட்டு அரசே செலவுத்தொகையை ஏற்க வேண்டும் என மோட்டார் ஒர்க் கர்ஸ் யூனியன் வலியுறுத்தியுள் ளது. இதுகுறித்து கன்னியாகுமரி டிஸ்டிரிக்ட் மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் மாவ ட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே விடம் செவ்வாயன்று அளித் துள்ள மனு விபரம் வருமாறு: கோவிட் 19 தொற்று நடவ டிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊராடங்கின் காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் முடக் கப்பட்டு தொழிலாளர்களும் சிறு வாகன உரிமையாளர்களும் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முடக்கம் முழுமையாக முடி வுக்கு வரும் வாய்ப்பு குறைவா கவே உள்ளதால் தொழிலின்றி வாடும் தொழிலாளர்களுக்கும் சிறு வாகன உரிமையாளர்களுக் கும் தேவையான நிவாரணத்தை அளிக்க அரசு முன்வர வேண்டும். மேலும் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலத் துக்கு சாலை வரி, பெர்மிட் புதுப் பிப்பு, தகுதி சான்று பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், அபராதம் வசூலிப்பது, மோட்டார் வாகன இன்சூரன்ஸ் பிரிமியம் மற்றும் மோட்டார் வாகன கடன் கொடுத்த அரசு வங்கி, தனியார் நிதி நிறுவனங்கள், சீட்டு கம்பெனி கள் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து வட்டியும் அசலும் கட்ட சொல்லி நிர்பந்தப்படுத்துவதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவிட் 19 பேரிடர் சம்பந்த மாக அரசு வாடகைக்கு தனியார் வாகனங்களை அமர்த்துவதை தவிர்த்து வாடகை கார், வேனை மட்டுமே பயன்படுத்த அரசு ஆணை படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்தும் நல உதவிகள் அரசு அறிவித்தபடி கிடைக்கவில்லை. பதிவு செய்தவர், செய்யாதவர் என்ற பாகுபாடின்றி பேட்ஜ் இருக் கும் அனைத்து வகை ஓட்டு நருக்கும் நிவாரணம் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை மாவட்ட தலை வர் பொன்.சோபனராஜ், மாவட்ட செயலாளர் பிரேம் ஆனந்த், சிஐ டியு மாவட்ட செயலாளர் கே.தங்க மோகன், மாவட்ட பொருளாளர் ஆசீர், நிர்வாகி பரமசிவன் உள் ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
சிற்றுந்து ஊழியர்களுக்கு நிவாரணம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏறத்தாழ 250 சிற்றுந்துகளும், அதில் சுமார் ஆயிரம் தொழிலா ளர்களும் உள்ளனர். ஊரடங்கு காரணமாக இந்த தொழிலாளர் கள் வாழ்வாதாரம் இழந்து வறு மையில் வாடுகின்றனர். சிற்றுந்து உரிமையாளர்களும் எந்த உதவி யும் செய்யவில்லை. ஊரடங்கு அறிவித்து இரண்டு மாதம் கடந்து விட்ட நிலையில் எந்த வித வரு மானமும் இன்றி சிற்றுந்து தொழி லாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் கடும் நெருக்கடி யில் வறுமையில் வாடுகின்றனர். கோவிட்19 தொற்று தடுப்பு முட ககத்தால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கன்னி யாகுமரி மாவட்ட மினி பேருந்து தொழிலாளர்கள் சங்கம் (சிஐ டியு) சார்பில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே விடம் மனு அளிக்கப்பட்டது