நாகர்கோவில், ஜூன்.24- அமெரிக்காவில் நடைபெறும் இன வெறி படுகொலைகளை கண்டித்து, காவல்துறையினரால் கழுத்தை நெ ரித்து கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளா யிட்டுக்கு நீதி கேட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறு ப்பினர்கள், மாவட்டகுழு உறுப்பி னர்கள், வட்டார நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாகர்கோ வில் அண்ணா பேருந்து நிலையத்தில் அமெரிக்க இனவெறியை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மேலும், தக்கலை, செண்பக ராமன்புதூர், தெங்கம்புதூர், ஆற்றூர், சுசீந்திரம் உட்பட மாவட்ட முழுவதும் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.