tamilnadu

img

மத்திய அரசு அறிவித்த கூடுதல் ஊதியத்தை வழங்குக அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம், ஜூலை 16-  மத்திய அரசு அறிவித்த கூடுதல்  ஊதியத்தை உடன டியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு  அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில்  செவ்வா யன்று (ஜூலை 16) ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.  சட்டப்படியான  ஓய்வூ தியம்  ரூ.3500 வழங்க வேண்டும், 7ஆவது ஊதி யக்குழுவில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், 10 வருடங்கள் பணி முடித்தவர்களுக்கு மேற்பார்வையாளராகப் பதவி உயர்வுவழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்கவில்லை என்றால் மேற்பார்வை யாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 5 வருடம்  பணி முடித்த உதவியாளருக்குப் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு சங்கத்தின் தலை வர் கற்பகம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர்  சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.ராமமூர்த்தி,  அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகி கன்னியப்பன், சிஐ டியு நிர்வாகி டி.கோவிந்தன், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்  சங்கத்தின் நிர்வாகி மூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் ராமலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.