tamilnadu

img

வீட்டுமனைக்கான இடத்தை அளந்து கொடுக்கக்கோரி மறியல்

சிதம்பரம்,ஆக.27- சிதம்பரம் அருகே அகரநல்லூர் ஊராட்சி பழைய  நல்லூர் கிராமத்தில் வசிக்கும் எழிலரசி, வினோதினி, பிரேமலதா, பாக்கியலட்சுமி,சத்தியா, சரளாதேவி, ஜான்சிராணி உள்ளிட்ட 12 குடும்பங்களுக்கு கடந்த  2013-ஆம் ஆண்டு  அன்றைய சட்ட மன்ற உறுப்பினர்  கே. பாலகிருஷ்ணன் முயற்சியால் தமிழக அரசு  சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டா கொடுத்த  இடத்திற்கான வீட்டு மனையை அளந்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீட்டு மனைப் பட்டா பெற்ற பயனாளி கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்,  சிதம்பரம் சாராட்சியர்,  வட்டாட்சியர் என அனைத்து  அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அப்போதும் கண்டு கொள்ளப்படவில்லை. இதனை யடுத்து, சிதம்பரம் - சீர்காழி தேசிய நெடுஞ்சாலை வேளக்குடியில் சாலை மறியல் போராட்டம்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாசிலாமணி தலை மையில் ஒன்று திரண்டனர். இதனை அறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், அண்ணாமலை நகர் காவல்  ஆய்வாளர் தேவேந்திரன்.  உதவி ஆய்வாளர் தனசேக ரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்  திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது, வரும் 30 ஆம் தேதிக்குள் இடத்தை  அளந்து கொடுப்பதாக வட்டாட்சியர் எழுத்துப்பூர்வ உறுதியளித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து போராட் டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த  பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் கற்பனைச் செல்வம், பழைய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன், உமா நாத், பெருமாள், பாலகிருஷ்ணன், பாலமுருகன், செல்வி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.