கடலூர், ஜூன் 27- கள்ளச்சாராயத்திற்கு எதிராகப் போராடி உயிர்த் தியாகம் செய்த தியாகிகள் குமார் - ஆனந்தனின் 21ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி கடலூர் ஆர்.என். எஸ் நினைவு மையத்தில் ரத்ததான முகாம் நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் கே.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர் இ.ஜீவானந்தம் வரவேற்றார். இம்முகாமை சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பி.என்.ரமேஷ் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட குருதி பரி மாற்று அலுவலர் டாக்டர் என். அபிஷா, காவல் உதவி ஆய்வாளர் கே.உதயகுமார், காங்கிரஸ் கட்சி வழக்கறி ஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜே. ராஜேஷ் கண்ணன், மாவட்டச் செயலாளர் டி.கிருஷ்ணன், தலைவர் என்.ஆர்.ஜி. லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் எஸ். சங்கர் குரு நன்றி கூறினார்.