கடலூர், நவ.16- உள்ளாட்சித் தேர்த லுக்கான ஆயத்தப் பணிக ளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான பிரதி நிதித்துவத்தில் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு பிரதிநிதித்து வம் கிடைக்கவில்லை. அதாவது, மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சி ஒன்றியம் செயல்பட்டு வருகி றது. இதற்கு மாவட்டத்தி லுள்ள 14 ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் சேர்த்து) ஊராட்சி களிலிருந்து 29 பிரதிநிதிகள் தேர்வு செய்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள் (50 ஆயிரம் ஓட்டு என்று அழைக்கப்படும்). இதன்படி ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக பிரதிநிதித்துவம் எண்ணிக்கை வருமாறு, கடலூர் 4, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, மேல்புவனகிரி தலா 3, விருத்தாசலம், அண்ணாகிராமம், நல்லூர், குமராட்சி, மங்களூர், கம்மா புரம், ஸ்ரீமுஷ்ணம் தலா 2, கீரப்பாளையம், காட்டு மன்னார்கோயில் தலா 1 இடங்கள் உள்ளன. இதில், கீரப்பாளையம், காட்டுமன்னார்கோயில் ஒன்றியங்களில் ஏற்கனவே 2 மாவட்ட கவுன்சிலர்கள் இருந்த நிலையில் தற்போது ஒன்றாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் கடலூர் ஒன்றியம் 3லிருந்து 4 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், பரங்கிப்பேட்டை ஒன்றிய ப்பகுதிகள் பல்வேறு ஒன்றி யங்களுடன் இணைக்க ப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான ஒதுக்கீடு விபரங்கள் வருமாறு (அடைப்பு குறிக்குள் வார்டு எண்), தாழ்த்தப்பட்டோர் (பெண்கள்) கடலூர் (1), அண்ணாகிராமம் (5), கீரப்பாளையம் (26), கும ராட்சி (28), காட்டு மன்னார்கோயில் (29), தாழ்த்தப்பட்டோர் (பொது) விருத்தாசலம் (16), குறிஞ்சிப்பாடி (12), நல்லூர் (17), நல்லூர் (18), மங்களூர் (19), பெண்கள் (பொது) கடலூர் (2), அண்ணாகிராமம் (6), பண்ருட்டி (7), குறிஞ்சிப்பாடி (10),குறிஞ்சிப்பாடி (11),விருத்தாசலம் (15),மங்களூர்(20), மேல்புவனகிரி(23), மேல்புவனகிரி(24), குமராட்சி (27). பொது வார்டு கள் கடலூர் (3), கடலூர் (4)பண்ருட்டி (8), பண்ருட்டி (9), கம்மாபுரம் (13), கம்மா புரம் (14), ஸ்ரீமுஷ்ணம் (21), ஸ்ரீமுஷ்ணம் (22) ஆகிய வார்டுகள் ஆகும்.