கடலூர், ஜூன் 21- கரும்பு விவசாயிகள் பெயரில் தேசிய வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்ற விவகாரத்தில் ஆலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் வெள்ளி யன்று (ஜூன் 21) விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 100 விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர். பெண்ணாடம் ஸ்ரீ அம்பிகா சுகர்ஸ், ஏ.சித்தூர் திருஆரூரான் சர்க்கரை ஆலைகளில் இரண்டாயி ரத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவ சாயிகளின் பெயரில் தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.300 கோடிக்கு மேல் மோசடியாக கடன் பெற்ற சர்க்கரை ஆலை உரிமையா ளர் ராம்.தியாகராசன், பொது மேலா ளர் மற்றும் உடந்தையாக செயல்பட்ட வங்கி அதிகாரிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். ராம்.தியாகராஜன் சொத்துக் களை பறிமுதல் செய்து கரும்பு விவ சாயிகளை வங்கி கடன் தொல்லையி லிருந்து அரசு பாதுகாக்க வேண்டும், அம்பிகா மற்றும் திருஆரூரான் சர்க் கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், 2017 - 2018ஆம் ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த விலையை எப்.ஆர்.பி தொகை ரூ.21 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும், 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மாநில அரசு அறிவித்துள்ள எஸ்ஏபி பாக்கித் தொகை ரூ.21 கோடியை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 10 மாத ஊதி யத்தை வழங்க வேண்டும், ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த வாக னங்களுக்கு வாடகை கொடுக்காமல் பல கோடிகளை ஏமாற்றி வரும் அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கரும்பு விவசாயி களுக்கு வங்கி மூலம் நோட்டீஸ், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பும் திருஆரூரான் குரூப்ஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அம்பிகா மற்றும் ஆரூ ரான் சர்க்கரை ஆலையில் உள்ள கனரக இரும்பு மற்றும் விலை உயர்ந்த மரங்களை திருட்டுத்தன மாக விற்பதை தடை செய்ய வேண்டும், உர லோனில் பலகோடி களை கையாடல் செய்து வெளிநாடு சென்ற பொது மேலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்டு கரும்பு விவ சாயிகள் கோட்டாட்சியர் அலுவ லகத்தை சென்றடையும் போது காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். காவல் துறை யின் தடுப்பையும் மீறி போராட்டம் தொடரவே, கோட்டாட்சியர் பிரசாந்த் கரும்பு விவசாயிகளிடம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒருவாரம் அவகாசம் கொடுங்கள் நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கிறேன் எனக் கூறினார். கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில், மாநில கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிசாமி, பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஜி.மாதவன், பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, மாநிலச் செயலாளர்கள் ஏ.கே.ராஜேந்திரன், எஸ்.ஜோதிராம், எம்ஆர்கே கூட்டு றவு சர்க்கரை ஆலை இயக்குனர் கே.ஆதிமூலம், சிபிஎம் வட்டச் செய லாளர் என்.எஸ்.அசோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.