சிதம்பரம், ஜூன் 1- கடலூர் மாவட்டத்தில் நடை பெறும் குறுவை சாகுபடி உழவு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆகியோர் பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், குமராட்சி ஒன்றி யங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் குறுவை சாகுபடி பயிர்களை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து குமராட்சி ஒன்றியம் கண்டியாமேடு கிராமத்தில் வயல் வெளிக்கு நடுவே விவசாயி களுடன் நடைபெற்ற கலந்துரை யாடல் கூட்டத்தில் ஏராளமான விவ சாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும், தேவைகளையும் கூறினார்கள். விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உரக் கிடங்கில் தேவையான அளவு உரம் இருப்பு உள்ளது. விதைகளும் உள்ளன. விவசாயிகள் நடவு பணி களை செய்திட விவசாய டிராக்டர்கள் உள்ளது.
அதனை உழவன் செயலி மூலம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். அதேபோல் கொரோனா காலங்க ளில் தற்போது நடவுப் பணிகள் நடை பெறுவதால் விவசாயிகள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து பணி களை மேற்கொள்ள வேண்டும் என தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார். பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறுகையில், வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல மைச்சர் அறிவித்துள்ளார். இதை யடுத்து வேளாண்துறை டெல்டா மாவட்டங்களில் அனைத்துவிதமான முன்னேற்பாடுகளையும் செய்து வரு கிறது. விவசாயிகளுக்குத் தேவை யான நெல் விதைகள், உரங்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி இந்த ஆண்டு 41 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில் 19 ஆயிரம் ஏக்கரில் தற்போது பயிரிடப்பட்டுள் ளது 17 ஆயிரம் ஏக்கர் நாற்றங்கால் அளவில் உள்ளது.
குடிமராமத்து பணிகள் மூலம் அனைத்து கால்வாய் களும் தூர்வாரப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் நன்கு சாகுபடி செய்யவேண்டும். அதேபோல் வெட்டுக்கிளி காற்றின் திசை வேகத்தில்தான் செல்லும் என ஜோத்பூர் வெட்டுக்கிளி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. எனவே பஞ்சாப் மாநிலம் நோக்கித்தான் வெட்டுக்கிளிகள் செல்லும் தமிழகம் வர வாய்ப்பு இல்லை. ஆனாலும் ஜோத்பூர் எச்ச ரிக்கை மையத்துடன் தொடர்பில் இருக்கிறோம். எனவே விவசாயி கள் கவலை அடைய வேண்டாம். உழ வன் செயலியை 6 லட்சம் விவசாயி கள் டவுன்லோட் செய்துள்ளனர். இதில் ஒரு விவசாயின் மகனோ, மகளோ, பேரனோ, பேத்தியோ இருந்தாலே போதும் அதனை டவுன்லோட் செய்து தகவல்களை விவசாயிக்கு தெரிவிக்கலாம். இதில் தெரிவிக்கப்பட்டுள்ள மானியத் திட்டம், பயிர்க் காப்பீடு, உரம் இருப்பு, மழை பற்றிய வானிலை அறிக்கை உள்ளிட்டவற்றை இந்த உழவன் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறி னார்.