tamilnadu

img

பண்ருட்டியில் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம்

சிதம்பரம், ஆக. 20- கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்  மட்டம் உயர்ந்திட மலற்றாறிற்ணை தூர்வார  ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி உடனே பணியை துவக்கவேண்டும், விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகில் தடுப்பணை மற்றும் ஷட்டர் அமைத்து தண்ணீரை திருப்பி  விடவேண்டும், ஆக்கிரமிப்பை அகற்றி ஆற்றில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை மலற்றாற்றில்  திருப்பி விடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டை நாமத்துடன் அரை நிர்வா ணப் போராட்டம் நடத்தினர். சங்கத்தின் ஒன்றியத் தலைவர் காந்தி தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் மாதவன், விவசாயத் தொழிலாளர் சங்க  மாவட்டத் தலைவர் ஏழுமலை, லோகநாதன், தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு  வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுகொடுத்த னர்.