கடலூர், அக்.22- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நம்ம கடலூர், கடலூர் சிறகுகள், அரிமா மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் கடலூரில் 3ஆம் ஆண்டு தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கி யது. இதன் நிறைவு விழா சிறார் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் எழுத்தாளர் மாலன் பங்கேற்று, குழந்தைகள் எழுத்தாளார்கள் மு. முருகேஷ், எஸ்.பாலபாரதி ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,“ குழந்தை களுக்கான இலக்கியம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும். குழந்தைப் பருவத்தில் படிக்க முடியவில்லையெனில், அவர்களின் கற்பனைத் திறன் குறைந்துவிடும்” என்றார். ஒருவரையொருவர் தொடர்பு கொள்வ தற்கு மொழி அவசியம். எனவே, மொழியி யல் வளத்தை மக்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தக வாசிப்பை குழந்தைகளிடம் பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் ஆயிஷா இரா.நடராஜன், என்.ஜனார்த்த னன், ப.இளந்திரையன், முன்னாள் எம்.பி. பி.ஆர். எஸ்.வெங்கடேசன், கடலூர் சிறகுகள் அமைப்பின் தலைவர் ஆர்.டி.சண்முகம், நம்ம கடலூர் அமைப்பின் நெல்சன், கமாண்டர் கௌஸ், எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பால்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.