tamilnadu

img

பாக். தாக்குதல்: இந்திய வீரர்கள்  2 பேர் காயம்

 காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட் டத்தில் உள்ள ரொமாலி தாரா என்ற இடத்தில், பாகிஸ்தான் ராணுவம் வெள்ளியன்று இரவு 9 மணிக்கு தொடங்கி, சிறிய ரக ஆயுதங்கள்  மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ் தானுக்கு இந்திய ராணுவ வீரர் களும் தகுந்த பதிலடி கொடுத்த தாக பாதுகாப்புத்துறை தக வல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ் தான் தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் காயமுற்றனர். அவர் களுக்கு ராணுவ மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.  மாநிலங்களவையில் எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தையொட்டி உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து மட்டும் 1,248 முறை அத்து மீறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள் ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதல்களால், இது வரை 4 இந்திய வீரர்கள் வீரமரண மடைந்ததாகவும் கூறினார்.