tamilnadu

img

காவிரி சிறப்பு வேளாண் மண்டலத்தில் கூடுதல் பிரதிநிதித்துவம் தருக!

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது புனையப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் காவிரி படுகை சிறப்பு வேளாண் மண்டல அதிகார அமைப்பில் விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதனன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் முழக்கமிட்டனர். (செய்தி : 3)