திருவாரூர், ஜூன் 8- ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தால் மனிதனின் ஆதார தேவைகளான நிலம், நீர், உணவு ஆகியவை காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவ சாய சங்க மாநில பொதுச் செயலா ளருமான பெ.சண்முகம் எச்ச ரிக்கை விடுத்துள்ளார். மேலும் திட்டத்தை அடியோடு ரத்து செய்திட மாபெரும் மக்கள் இயக்கம் உருவாக வேண்டும் என வும் அவர் கேட்டுக் கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் நடை பெற்ற ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு இருசக்கர வாகன விழிப்பு ணர்வு பிரச்சாரத்தையொட்டி திரு வாரூர் ஒன்றியம் புலிவலம் கடை வீதியில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன் தலைமையேற்றார். இதில் பெ.சண்முகம் மேலும் பேசியதாவது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் அபாயம் குறித்தும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கு காவல்துறை கடுமையான கெடு பிடிகளை கடைபிடிக்கிறது. அனைத்து நடவடிக்கைக்கும் தடை போடுகிறது. நாட்டின் அரசியல் சாசனம் வழங்கி யுள்ள கருத்துரிமையின் அடிப்ப டையில் அரசு ஒரு திட்டத்தை நல்லதா,கெட்டதா என சொல்வ தற்கான அனைத்து உரிமையும் மக்களுக்கு உண்டு. எனவே காவல்துறை சட்டவிரோதமாக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
திருவண்ணாமலை மாவட் டத்தில் எட்டுவழிச்சாலை திட்டம் குறித்த எதிர்ப்பு இயக்கங்களுக்கு காவல்துறையைக் கொண்டு அரசு கடும் தடைகளைப் போட்டது. எட்டு என்று சொன்னாலே குற்றம் என்ற அளவிற்கு தமிழக அர சின் அணுகுமுறை இருந்தது. ஆனால் தற்போது தமிழக முதல்வர் எட்டுவழி சாலை குறித்து பேசுகிறார். அத்திட்டத்திற்கு ஆத ரவாக பேசிக்கொண்டிருந்த அவர் நாடாளுமன்ற தேர்தல் தோல் விக்கு பிறகு இது மத்திய அரசின் திட்டம், தமிழக அரசின் திட்டம் அல்ல என்கிறார். உயர்நீதிமன்றம் விதித்த தடை யை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத் தில் மத்திய அரசு மனு செய்த போது உச்சநீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாரத்தை பார்க்கும் போது ஏராளமான விதிமீறல்கள் நடந்துள்ளது தெரியவருகிறது என உச்சநீதிமன்றம் கூறுகிறது. இதே போன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் மக்களின் மீது திணிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து மக்களி டம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி டக்கூட அரசு விரும்பவில்லை.
டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி மட்டுமே பிரதானமான தொழில். இதை விட்டு விட வேண் டும் என அரசு விரும்புகிறதா. சோறு வேண்டுமா? எண்ணெய் வேண்டுமா? என்றால் சோறு வேண்டும் என்று தான் மக்கள் கூறுவார்கள். எனவே அனை வரும் ஒன்றிணைந்து போராடி னால் தான் டெல்டா மாவட்டம் நெற்களஞ்சியம் என்ற பெருமை யை பாதுகாக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் காவிரி நதி நீரின் வருகையை எதிர்பார்த்து நாம் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடித்துக் கொண்டிருக்கின் றது. ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு என்பது கேள்விக் குறியாக உள்ளது. இந்த பிரச்சனையில் உச்சநீதி மன்றம் கூறிய தீர்ப்பின்படி காவிரி நீர் தேசத்தின் சொத்து என்பதால் அணைகள் அனைத்தையும் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இவ்வ ளவு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத் தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து ஒரு வார்த்தையாவது கூறுகிறாரா என்றால் இல்லை. இவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள். இந்த அரசின் செயல்பாடும் அப்படிதான் உள்ளது.
எனவே டெல்டா மாவட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒன்றுபட்ட வலுவான போராட்டங்கள் அவசியமாகிறது. இதன் அடிப்படையில் வரும் 11 ஆம் தேதியன்று டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணையை திறக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டமும், 12 ஆம் தேதியன்று சிபிஎம், விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டமும் நடைபெறவுள்ளது. இதில் மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். டெல்டா மாவட்ட மக்கள் சொந்த மண்ணில் அகதிகளாகி உணவிற்கு கையேந்தும் நிலை வராமல் தடுத்திட வரும் 18 ஆம் தேதியன்று தஞ்சாவூரில் விவசாயிகள் சங்கத்தின் முன்முயற்சியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் காவிரி பாசன பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிரந்தர கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க இருக்கின்றோம். இதன் மூலமாக மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள போராட்டங்களையும் தொடர வேண்டியுள்ளது. கூட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆர்.சாமியப்பன், எஸ்.ராமசாமி, டி.முருகையன், நகர செயலாளர் எம்.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.