tamilnadu

மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு புதிய செயலாளர் தேர்வு

உடுமலை, டிச. 4- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு வின் சிறப்பு பேரவைக் கூட்டத்தில் புதிய செய லாளராக கே.தண்ட பாணி தேர்ந்தெடுப் கப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடு மலை நகரக்குழுவின் சிறப்பு பேரவைக்கூட் டம் புதனன்று  நகரக்குழு உறுப்பினர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உடுமலை நகர் பகுதியில் உள்ள அனைத்து சாலை களும் குண்டும், குழியுமாக உள்ள நிலையில், அதனை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். உடுமலை அரசு மருத்துவமணையில் நிலவும் மருந்துவர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் மின் வசதி மற்றும் உடல் கெட்டு விடாமல் இருக்க குளிர்சாதன வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, இந்த கூட்டத்தில் உடுமலை நகரக்குழு செயலாளராக கே. தண்டபாணி தேர்வு  செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம். ராஜகோபால், சி. சுப்பிரமணியம், எஸ். ஆர். மதுசூதனண், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்ச லிங்கம், நகரக்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, மாலினி, சுதா சுப்பிரமணியம், விஸ்வநாதன் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.