திண்டுக்கல், டிச.21- சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவ லாசிரியரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான மூத்த எழுத்தாளர் தோழர் டி.செல்வ ராஜ் உடல் நலக்குறைவு காரணமாக வெள்ளியன்று இரவு ஒன்பது மணியள வில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்து வமனையில் காலமானார். அவருக்கு வயது (87). தோல் பதனிடும் தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி இவர் எழுதிய “தோல்” நாவலுக்கு 2011-ஆம் ஆண்டு சிறந்த புதினத்திற்கான தமிழக அரசின் இலக்கிய விருதை பெற்றது. 2012 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவரது “தேனீர்” நாவல் திரைப்படமாக வந் துள்ளது. தலித் மக்களின் வாழ்க்கை யைச் சித்தரித்த “மலரும் சருகும்” நாவல், 200-க்கும் மேற்பட்ட சிறுகதை கள், 50-க்கும் மேற்பட்ட ஓரங்க நாட கங்களை எழுதியுள்ளார். கடைசியாக எழுதிய அடுக்கம் என்ற நாவல் பதிப்பில் உள்ளது. சமீபத்தில் வண்ணக்கதிரில் “களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்” என்ற பகுதியிலும் தோழர் டி.செல்வ ராஜ் குறித்து தோழர் ஜி.இராம கிருஷ்ணன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி
திண்டுக்கல் நகர் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் டி. செல்வராஜ் உடலுக்கு கட்சி மற்றும் தமு எகச தலைவர்கள்,தோழர்கள், பல் வேறு அமைப்பினர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். கோவிந்தாபுரம் மின் மயானத்தில் அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.நன்மாறன், கே. பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் என். பாண்டி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், திண் டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர். சச்சி தானந்தம், சிபிஐ மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.சந்தானம், தமுஎகச மாநில கௌரவத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன், மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சிகரம் செந்தில்நாதன், இரா. தெ.முத்து, கருப்புகருணா, கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பேரா. ஆனந்த குமார், இரா.விச்சலன், தீக்கதிர் முன் னாள் பொது மேலாளர் எஸ்.ஏ.பெரு மாள், செய்தியாசிரியர் ப.முருகன், பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொதுமேலாளர் ஜோ.ராஜ்மோகன், விளம்பர மேலாளர் ஆர்.உமாபதி, வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக பொதுச்செயலாளர் முத்துஅமுத நாதன், ராஜமாணிக்கம், நாகேந்திரன், கென்னடி, டாக்டர்கள் ஜி.ராஜேஷ்வரன், அமலாதேவி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, இலக்கிய களம் நிர்வாகி கள் ராமமூர்த்தி, கிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், பேரா.மணிவண்ணன் உள் ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.(நநி)