tamilnadu

img

சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கையகப்படுத்திய நிலங்கள் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் எழுச்சிப் போராட்டம் வெற்றி

பெரம்பலூர், செப்.30-  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை தாலுகா திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே திரு மாந்துறை, எறையூர் சர்க்கரை ஆலை பெருமத்தூர், மிளகாநத்தம், பெண்ண கோனம், லெப்பைகுடிகாடு, அயன்பேரையூர், கீரனூர் உள்ளிட்ட எட்டு கிராமங்களைச் சேர்ந்த விவசாயி களுக்கு சொந்தமான விளை நிலங்கள் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல்  சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதாக கூறி ஆந்திராவை சேர்ந்த ஜிவிகே குழுமமும் இந்திய பெரு  வணிகத்துறை (டிட்கோ) சேர்ந்து 2007 ஆம் ஆண்டு கையகப்படுத்தினர்.  விவசாயிகள் தங்களது வாழ்வா தாரம் பாதிக்கும் என்று கூறி நிலம் தர மறுத்த போது நிலத்திற்குண்டான கிரையத் தொகையுடன் வீட்டிற்கு ஒரு வருக்கு வேலையும் இலவச வீட்டு மனையும் தருவதாக ஒப்பந்தப் பத்திரம் பதிவு செய்து கொடுத்தனர்.

இத்திட்ட த்தினை 5 ஆண்டிற்குள் 827 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதாகவும் உறுதி அளித்திருந்தனர். மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூரில் பொருளாதார மண்டல திட்டம் அமைக்கப்பட்டால் சிங்கப்பூர் போல தொழில் வளர்ந்த மாவட்டமாக மாறும் என உறுதி கூறினர். நிலம் கையகப்படுத்தி 13 ஆண்டுகளாகியும் இதுவரை சிறு நடவடிக்கை கூட எடுக்க வில்லை. இதுகுறித்து 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்ட மன்றத்தில் 110 விதியின் கீழ் இத்திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் பிறகு தொடர்ச்சி யாக வந்த அம்மாவின் அரசு என தெரி வித்து ஆட்சி செய்து வரும் எடப்பாடி அரசு இத்திட்டம் குறித்து கண்டு கொள்ளவே இல்லை. இந்நிலையில் நிலம் கொடுத்த விவசாயிகள் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

3 ஆயிரம் ஏக்கர் நல்ல விளை நிலங் களும் கருவேலி முள் முளைத்து தரிசாக கிடக்கிறது. எனவே தான் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013ன் படி எந்த திட்டத்திற்காக நிலம் கையகப் படுத்தப்பட்டதோ அத்திட்டம்  5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றா விட்டால் நிலத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற சட்ட விதிகளின்படி ஜிவிகே குழுமம் செயல்படவில்லை. ஆகவே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நிலம் கொடுத்த விவசாயி கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இதர விவசாய சங்கங் களும் இணைந்து செப்டம்பர் 30 ஆம் தேதி நில மீட்பு போராட்டம் நடத்த முடிவு செய்து அறிவித்திருந்தனர். அதன்படி திங்களன்று திருமாந்துறை கிராமத்தில் உள்ள நிலத்தில் இறங்கி போராட்டத்தை துவங்கினர். மாநில செயலாளர் சாமி.நடராஜன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்ன துரை விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் என்.செல்லதுரை, மாவட்ட தலை வர் ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகித்து, பொருளாதார மண்டல திட்ட முறைகேடு குறித்து விளக்கவுரையாற்றினார். பின்னர் மண் வெட்டி, முள்வெட்டும் அரிவாள் மற்றும் கயிறுடன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு செல்ல முயன்றனர். அப்போது காவல் துறையினர் தடுத்து விவசாயிகளை விரட்டினர். அதையும் மீறி இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று நிலங்களில் இறங்கி முள் செடிகளை அப்புறப்படுத்தினர். அவர் களை தொடர்ந்து விவசாயிகளும் நிலத் தில் இறங்கி முள் செடிகளை அகற்றி விவசாயப் பணியினை துவக்கினர். பின்னர் பொதுச்செயலாளர் பெ.சண் முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது. 6.10.2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மத்திய அர சிடம் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு அனுமதி கோரியிருந் தது.  அதனை மத்திய அரசு அங்கீகரித்த பின்பு 10.2.2009 அன்று ஜிவிகே குழு மத்திற்கு அனுமதி வழங்கியது. அதன் பிறகு 5 ஆண்டுகளாகியும் திட்டம் தொடங்காததால் 24.7.2014 அன்று மத்திய அரசு அனுமதியை ரத்து செய்து அறிவித்துள்ளது. 

தற்போது 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு செங்கலை கூட அவர்கள் எடுத்து வைக்கவில்லை. பெரம்பலூர் பின்தங்கிய மாவட்டமாக இருப்பதற்கு மத்திய - மாநில அரசு களின் ஆட்சியாளர்களே காரணம். இந்த மாவட்டத்திலே உள்ள படித்த இளைஞர்களின் வாழ்விலே ஒளி வீசும் என்பதற்காகத் தான் இம்மாவட்ட விவசாயிகள் குறைந்த விலைக்கு நிலங்களை வழங்கியுள்ளனர். இந்த நிலங்களெல்லாம் மக்காச் சோளம், பருத்தி, கம்பு, கடலை விளை ந்த நிலங்களாகும். ஏறக்குறைய 10 ஆண்டுகளாக 3 ஆயிரம் ஏக்கர்  நிலங்களும் தரிசாக போடப்பட்டிருப்பது என்று சொன்னால் அதன் இழப்பை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த நாட்டின் வேளாண் உற்பத்தியோடும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.தற்போது 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு செங்கலை கூட அவர்கள் எடுத்து வைக்கவில்லை. பெரம்பலூர் பின்தங்கிய மாவட்டமாக இருப்பதற்கு மத்திய - மாநில அரசு களின் ஆட்சியாளர்களே காரணம். இந்த மாவட்டத்திலே உள்ள படித்த இளைஞர்களின் வாழ்விலே ஒளி வீசும் என்பதற்காகத் தான் இம்மாவட்ட விவசாயிகள் குறைந்த விலைக்கு நிலங்களை வழங்கியுள்ளனர். இந்த நிலங்களெல்லாம் மக்காச் சோளம், பருத்தி, கம்பு, கடலை விளை ந்த நிலங்களாகும். ஏறக்குறைய 10 ஆண்டுகளாக 3 ஆயிரம் ஏக்கர்  நிலங்களும் தரிசாக போடப்பட்டிருப்பது என்று சொன்னால் அதன் இழப்பை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த நாட்டின் வேளாண் உற்பத்தியோடும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.

10 ஆண்டு காலம் நிலங்கள் தரிசாக போடப்பட்டிருப்பது என்பது எவ்வ ளவு பெரிய குற்றம் என்பதை அரசாங் கம் யோசித்து பார்க்க வேண்டும். மேலும் மத்திய அரசு 2014 ஆம் ஆண்டே தொழில் தொடங்குவதற்கான அனுமதியை ரத்து செய்து விட்டதால் ஜிவிகே குழுமம் தொழில் தொடங்குவது என்ற பேச்சிற்கே இடமில்லை.  மத்திய அரசு ரத்து செய்தது மாநில அரசிற்கு தெரியாமல் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. ஆகவே மத்திய அரசு ரத்து செய்ததை மாநில அரசு விவசாயிகளுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது ஜிவிகே குழுமத்தோடு இணைந்து மாநில அரசும் நாடக மாடுகின்றது.

மூன்று நாட்களுக்கு முன்னர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையின் போது கூட அனுமதி ரத்தான நிலையை அதிகாரி கள் மறைத்துள்ளனர். இது மாபெரும் குற்றம். 2013 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப் படுத்தப்படுகிறதோ அந்த நோக்கத் திற்காக மட்டும் தான் நிலங்களை பயன் படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே அந்த நிலங்களை அவர வர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். அதனடிப்படையில் தான் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நிலத்தில் இறங்கி விவசாயப் பணி களை துவக்கி வைத்துள்ளது. அவர வருக்கு சொந்தமான நிலங்களில் விவ சாயிகள் பயிர் செய்வதை மாவட்ட நிர்வாகமோ ஜிவிகே குழுமத்தினரோ தடுக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பின்னர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து சிறப்பு பொருளாதார மண்டல அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டுள்ள நிலையில் விவசாயிகளிடம் நிலத்தை திரும்ப ஒப்படைப்பதுடன் நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பட்டா ஆகியவற்றை விவசாயிகள் பெயருக்கு மாற்றித் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர்கள் வலி யுறுத்தினர். விதொச நிர்வாகி பி.ரமேஷ், விசிக தமிழ்மாணிக்கம், வீரசெங் கோலன், மனித நேய ஜனநாயக கட்சி ஷாகுல் ஜகாங்கீர், திராவிடர் கழகம் தங்கராசு, தாமோதரன், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்டச் செயற்குழு எஸ்.அகஸ்டின், எ.கலையரசி, வட்டச் செயலாளர்கள் எஸ்.பி.டி.ராஜாங்கம், எஸ்.ஆறுமுகம். எ.முருகேசன், மாற்றுத் திறனாளி சங்க நிர்வாகி எஸ்.பி. பெருமாள், நிலம் கொடுத்தோர் சங்க நிர்வாகி சித்தூட் ராமசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

(ந.நி.)