tamilnadu

img

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி, ஜூலை 28 காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிக ளில் பெய்து வரும் மழையால் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்க ல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 8500 கன அடியாக உள்ளது. இதனால் அங்கு பரிசல் சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளது. இந்நிலையில், கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8500 கன அடியாக உள்ளது. இதனால் ஒகேனக்கலில் உள்ள ஐந்தருவிகள், மெயின் அரு வியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பரிசல் சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர் மேட்டூர் அணைக்கு செல்லும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7200 கன அடியில் இருந்து 8200 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் உயர்ந்து வருகிறது. ஞாயிறன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 14.36 டி.எம்.சி. ஆகவும், அணையின் நீர்மட்டம் 44.22 அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.