tamilnadu

img

சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை அகற்ற உத்தரவு

சென்னை,டிச.19- கனமழையால் சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை பொதுப்  பணித்துறையின் உதவியுடன்  உடனே இடித்து அகற்றுமாறு  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்  கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் சேதமான கட்டிடங்கள், பள்ளி வளாகங்களில் இல்லாத நிலையை உறுதி செய்யுமாறும் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அறி வுறுத்தியுள்ளார். மேலும் பள்ளி வளாகங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை அப்புறப்படுத்துவது தொடர்பாக தலைமை ஆசிரியர் களுக்கு அறிவுறுத்தல் வழங்க வும் முதன்மைக் கல்வி அலுவலர்க ளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.