சென்னை,அக்.23- தமிழ்நாடு செவிலியர் கவுன்சி லில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவிலியர் படிப்பை முடித்து, தன்னை மூன்றாம் பாலின பெண் என பதிவு செய்ய, தமிழ்நாடு செவி லியர் கவுன்சிலில் திருநங்கை ரக்சிகா ராஜ் விண்ணப்பித்திருந் தார். இது நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்தி ரன் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவரின் பதிவு குறித்த கவுன்சில் விதிகளில் திருத்தம் செய்ய இருப்பதாகவும், மனுதாரர் கோரியபடி பதிவு செய்ய இடைக் கால ஏற்பாடு செய்யப்பட்டிருப்ப தாகவும் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, திருநங்கை ரக்சிகா ராஜின் பெயரை தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் தற்காலிக மாக பதிவு செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.