tamilnadu

img

மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு பிரச்சார இயக்கம்

தூத்துக்குடி, நவ.3- தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் (சிஐடியு) மாநி லக்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது. பின்னர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜி.ஜெலஸ்டின் கூறியதாவது:

மீன்பிடி அமைச்சகம் உருவாக்கிடுக!

தற்போது தேசிய கடல் மீன்பிடி மற்றும் ஒழுங்கமைப்பு மசோதா 2019 நிறைவேற்றப்படும் நிலையில் பாரம்பரியமான மீனவர்களின் தொழி லானது முழுவதுமாக அழிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தத் திட்டமானது கார்ப்பரேட்டு களிடம் மீன்பிடித்துறையை தாரை வார்க்கும் நோக்கம் கொண்டது, இதனை மீன்பிடி சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். அதேபோல் மாநில அரசு மீன வர்களுக்கு கொடுத்த வாக்குறுதி கள் எதுவும் இதுவரை நிறைவேற் றப்படவில்லை .குறிப்பாக மீன வர்களின் நலவாரியம் மீனவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது. ஆனால் இதுநாள் வரை மீன் பிடி நலவாரியம் மூலம் ஒருவருக்கு கூட ஓய்வூதியம் வழங்கப்பட வில்லை. அதேபோல் பழவேற்காடு அதானி துறைமுகத்தை விஸ்தரிக்கப் போவ தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக மாநில அரசுத் தரப்பில் 2000 ஏக்கர் நிலம் கொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அப்பகுதியை சுற்றி உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரம் மிக வும் பாதிப்படையும். எனவே இத்திட் டத்தை கைவிட வேண்டும். இந்திய - இலங்கை மீனவர் பிரச்ச னையில் மத்திய அரசும் மாநில அர சும் இனியும் தூங்காமல் உடனடி யாக செயல்பட வேண்டும் .மத்திய அரசு இலங்கை அரசோடு பேச்சு வார்த்தை நடத்தி மீனவர்களுக்கு மீன் பிடிக்க ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்பிடி காலங்களில் மீனவர்கள் இறக்க நேரிடும்போது அவர்களின் குடும்பங்களுக்குபழைய காப்பீட்டு திட்டத்தில் உள்ளதுபோல் இழப் பீட்டுத் தொகை ரூபாய் 10 லட்சம் மீன வர் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து அரசு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் ஆழ் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு சேட்டிலைட் உதவியின் மூலம் புயல் போன்ற காலங்களில் எச்சரிக்கை விடுக்க மற்றும் அவர்கள் கடலில் சிக்கி கொண்டால் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன் பிடி இல்லாத காலங்களில் அதற்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் தேசிய மீனவர் சேமிப்பு திட்டம் - நீலப்புரட்சி மூலம் - மத்திய அரசு ரூபாய் 1500 மாநில அரசு ரூபாய் 1500 மற்றும் மீனவர்கள் பங்களிப்பில் ரூபாய் 1500 மொத்தம் 4,500 ரூபாய் மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜ ராத் போன்ற பல்வேறு மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது. இத் திட்டத்தை தமிழக அரசு உடனடி யாக செயல்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி பிரச்சாரம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் வி. குமார், தமிழ்நாடு மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் அந்தோணி, மாநில நிர்வாகிகள் பேச்சிமுத்து, லோக நாதன், அலெக்சாண்டர், சுப்பிரமணி யன் உள்ளிட்டோர் உடன் இருந்த னர்.