தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று 765 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இத்துடன் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16ஆயிரத்து277 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்து 576 ஆகும். ஞாயிறன்று 8பேர் மரணமடைந்தனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 8ஆயிரத்து 324 பேர் ஆகும்.