tamilnadu

img

சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

சென்னை, மே 21- சின்னத்திரை படப்பிடிப்பு கள் நிபந்தனைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி  அளித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டி ருக்கும் அறிக்கை வருமாறு: தமிழ்நாடு முதலமைச்சர் பழனி்சாமியிடம் தென் னிந்திய திரைப்பட தொழி லாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத் திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தங்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது என்றும் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தி ருந்தனர்.

சின்னத்திரையினரின் இந்தக் கோரிக்கையை பரி சீலித்த முதலமைச்சர், நிபந்த னைகளுடன் படப்பிடிப்பு களை நடத்த அனுமதி அளித்துள்ளார். அதன்படி, சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்குக்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த  வேண்டும். தடை செய்யப் பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. பார்வை யாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது படப்பிடிப்பு நடத்தப்ப டும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும் பின்பும் கண்டிப்பாக  கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். படப் பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர  மற்ற தொழில்நுட்ப கலை ஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். நடிகர் நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின் போது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.

படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை  சுத்தம் செய்து கொள்ள வேண்டும். படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத் திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வாகனங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண் டும். அதேபோன்று படப்  பிடிப்பிற்கு உபயோகப்ப டுத்தப்படும் கேமரா கிரேன்  உட்பட அனைத்து சாதனங் களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். சளி, இருமல், காய்ச்சல்,  மூச்சுத்திணறல் போன்ற அறி குறிகள் இருக்கும் கலை ஞர்கள் அல்லது தொழில் நுட்ப பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. இத்த கைய அறிகுறி உள்ளவர்கள்  உடனடியாக மருத்துவ பரி சோதனைக்கு அனுப்ப வேண்டும்.

அதிகபட்சமாக நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணி யாளர்கள் உட்பட 20 பேருக்கு மிகாமல் படப் பிடிப்பு நடத்தலாம். சென்னையில் படப் பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரி டமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும். மத்திய-மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுக ளையும் தவறாமல் பின்பற்ற  வேண்டும். படப்பிடிப்புக்கு வருகை தரும் அனைவரும் இந்த நிபந்தனைகளை தவறாமல் கடைப்பிடிப்பதை சின்னத் திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்து கொடுத்தால் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்  கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.