இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் கோட்டையில் நடைபெற்ற சிப்பாய் புரட்சியின் 214ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் வேலூர் மக்கான் சிக்னலில் அமைந்துள்ள சிப்பாய் புரட்சி நினைவு தூண் அருகே மாவட்ட ஆட்சியர் அ.சண்முகமசுந்தரம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.