tamilnadu

img

குஜராத்தில் தீ விபத்து: 15 மாணவர்கள் மரணம்

குஜராத்தில் சூரத் பகுதியில் நடத்த தீ விபத்தில் சிக்கி 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள சர்தானா பயிற்சி வகுப்பு கட்டத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.  மாலை 3.30 மணியளவில் கட்டத்தின் 3 வது 4 வது மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. இதையடுத்து பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்கள் வெளியே குதித்துள்ளனர்.

 இந்த தீவிபத்தில் சிக்கி 15 மாணவர்கள்  உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் தீயில் கருகி உயிரிழந்தவர்களுக்கு குஜராத் முதல்வர் மற்றும் பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு  வழங்கப்படும் என  குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி அறிபித்துள்ளர்.